ஒற்றை நோட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரனாகிய நபர் - எப்படி தெரியுமா?
இங்கிலாந்தை சேர்ந்த பால் வைமேன்(Savvy Paul) என்பவர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக செயல்பட்டுவருகிறார். தொண்டு நிறுவனத்திற்கு வரும் நன்கொடைகளை வைத்து, நிறுவனத்திடம் சேர்க்கும் பணியை செய்து வந்தார்.
அந்த வகையில், எஸ்ஸெக்ஸ் பகுதியில் இருந்த கடை ஒன்றில் நன்கொடைகளை சேகரித்தபோது, உண்டியலில் வித்தியாசமான பழைய நோட்டு ஒன்று இருப்பதை கண்டு, அந்த நோட்டை ஒரு ஏல நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.
அப்போது இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிகாரிகள் இந்த கரன்சி 1917ம் ஆண்டில் அச்சடிக்கப்பட்டது. ஏலத்தில் விற்பனை செய்தால் 30,000 யூரோக்கள் வரை கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.
இதுவரையில் இந்த நோட்டுகளில் 10 க்கும் குறைவானவையே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆகவே, இந்த நோட்டை ஏலத்தில் விட முடிவு செய்திருக்கிறார் பால்.

கோடீஸ்வரனாகிய நபர்
இதனால், கடந்த ஏப்ரல் 28ம் தேதியில் நோட்டிற்கான ஏலம் ஆன்லைன் மூலம் நடந்தது. பரபரப்பாக சென்ற இந்த ஏலத்தில், 140,000 யூரோக்களுக்கு சென்றுள்ளது.
அதாவது இந்திய மதிப்பின் படி 1.35 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி அதிர்ச்சியளித்துள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சியுடன் பால் தெரிவிக்கையில், 30,000 யூரோக்கு விற்பனையாகும் என நினைத்தேன்.,

ஆனால் 140,000 யூரோக்களுக்கு விற்பனையாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த தொகையை தொண்டு நிறுவனத்திடமே ஒப்படைக்க இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.