ஒரே வாரத்தில் மெல்லிடை வேண்டுமா? இந்த ஒரே ஒரு இயற்கை சாறு போதும்
வாழைத்தண்டு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாக இருப்பது நம்மில் பலருக்குத் தெரியும்.
நமக்குத் தெரியாத பல மருத்துவ குணங்கள் இதில் உள்ளது. அதிலும் இதன் சாறு பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.
வாழைத்தண்டை தொடர்ந்து இதன் சாற்றைக் குடித்துவந்தால், உடல் எடை குறையும். சர்க்கரை மற்றும் கொழுப்பு உடனடியாக ரத்தத்தில் கலப்பதை இதன் சாறு தடுக்கும்.
வாரத்துக்கு 3 முறை வாழைத்தண்டு சாறு குடித்தால் சிறு நீரகப்பாதையில் உள்ள தொற்று நீங்கும்.
மருந்து, மாத்திரைகளோடு வாழ்வதை தவிர்க்க வாழைத்தண்டு சாறு உதவும்.
தேவையான பொருட்கள்
- சிறிய வாழைத்தண்டு - ஒன்று
- பூண்டு - 2 பல்
- ஓமவல்லி இலை
- வெற்றிலை - தலா ஒன்று
- துளசி - சிறிதளவு
- மிளகு - 3
செய்முறை
வாழைத்தண்டை பட்டை, நார் நீக்கி, வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.
பூண்டு, ஓமவல்லி இலை, வெற்றிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிக்சியில் நறுக்கிய வாழைத்தண்டு, பூண்டு, ஓமவல்லி இலை, வெற்றிலை, துளசி, மிளகு சேர்த்து, நீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டிக்கொள்ளவும்.
வாரம் ஒரு முறை இந்த சாற்றை அரை டம்ளர் அளவு பருகினால் சளி, இருமல் தொந்தரவில் இருந்து பாதுகாக்கும்.
முக்கிய குறுப்பு
வாழைத்தண்டு சாற்றை அப்படியே குடிப்பது கொஞ்சம் கடினமான காரியம்தான்.
அப்படிக் குடிக்க முடியாதவர்கள் அதனுடன் மோர், ஆப்பிள் ஜூஸ் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கலாம்.