முடி வளர்ச்சிக்கு உதவும் வாழைப்பழத் தோல்... எப்படி பயன்படுத்தனும் தெரியுமா?
முடி வளர்ச்சிக்கு வாழைப்பழத் தோல் எப்படி பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அழகை அதிகரிக்கும் கூந்தல்
இன்றைய காலத்தில் இளம் வயதினர் தங்களது முடியை குறித்து அதிகம் கவலை கொள்கின்றனர். ஏனெனில் இளம் வயதில் முடி கொட்டும் பிரச்சனை, நரை முடி பிரச்சனை இவைகளால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
முடிவளர்ச்சியினை ஊக்குவிக்கும் வைட்டமின் டி, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் ஒரு கைப்பிடி கரிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் ஜுஸாக சாப்பிட்டால் முடி உதிர்வது நிற்குமாம். அதுமட்டுமின்றி வாழைப்பழ தோலை வைத்து முடி உதிர்வு பிரச்சனை, பளபளக்கும் கூந்தலை எவ்வாறு கொண்டு வரலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
முடி பளபளப்பிற்கு வாழைப்பழ தோல்
முதலில் வாழைப்பழத்தை நன்றாக கழுவி அதிலிருந்து தோலை மட்டும் எடுத்து அரைக்கவும். அதில் சிறிதளவு தேன், தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் பால் சேர்த்து பேஸ்ட் போன்று கலக்கவும்.
தயாரித்து வைத்துள்ள வாழைப்பழ தோல் பேஸ்ட்டை உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு தலையில் போடப்பட்டுள்ள ஹேர் மாஸ்கை சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் தலையில் ஊற வைக்க வேண்டும்.
பின்பு வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். முக்கியமாக கெமிக்கல் இல்லாத லேசாக ஷாம்பு போட்டு குளிக்கவும்.
இந்த ஹேர் மாஸ்கை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தினால் சிறந்த முடிவினை காணலாம்.
வாழைப்பழத் தோலில் பொட்டாசியம், வைட்டமின் பி6, மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை தலைமுடிக்கு பெரிதும் உதவுகின்றது.
மேலும் இறந்த செல்களை அகற்றி கூந்தலை பளபளப்பாகவும் வைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |