டாய்லெட்டில் மொபைல் அதிகமாக பயன்படுத்துறீங்களா? இந்த ஆபத்து ஏற்படுமாம்
டாய்லெட்டில் அமர்ந்து கொண்டு அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்தினால் சில பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து நேரங்களில் அனைவரது கைகளில் மொபைல் போன் இருந்து கொண்டே இருக்கின்றது. எந்த இடத்திற்கு சென்றாலும் மொபைல் போனை பயன்படுத்தி வருகின்றனர்.
சிலர் டாய்லெட் செல்லும் போது கூட மொபைல் போனை கையிலேயே எடுத்துச் செல்கின்றனர். அந்த வகையில் டாய்லெட்டில் அமர்ந்து கொண்டு அதிக நேரம் மொபைல் பார்த்தால் என்னென்ன உடல் தொந்தரவு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மூல நோய்
டாய்லெட்டில் அமர்ந்து கொண்டு மொபைலில் வீடியோ ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தால், மலக்குடல் நரம்பில் அழுத்தம் அதிகமாகும். இதனால் மூலநோய் அல்லது ஹேமராய்ட்ஸ் போன்ற பிரச்சனை ஏற்படும். தற்போது உங்களுக்கு எந்தவொரு அறிகுறி இல்லையென்றாலும், எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படுமாம்.
வெரிகோஸ் வெயின்
10 முதல் 15 நிமிடத்திற்கு மேல் டாய்லெட்டில் அமர்ந்திருந்தால் கீழ் மலக்குடல் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாகுமாம். இதனால் ரத்த நாளங்கள் பலவீனமடையுமாம். எதிர்காலத்தில் வெரிகோஸ் வெயின் போன்ற பிரச்சனைகள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
பாக்டீரியா தொற்று
டாய்லெட்டில் அதிக நேரம் எடுத்துக் கொண்டு மொபைல் போனை பயன்படுத்தினால் ஈ கோலை மற்றும் சால்மோனெல்லா போன்ற குடல் பாக்டீரியாக்கள் சருமத்தில் பரவ அதிக வாய்ப்புள்ளது. டாய்லெட்டிலிருந்து வெளியே வந்ததும் கைகளை கழுவிவிடலாம். ஆனால் மொபைல் போனை கழுவ முடியாது என்பதால் அதில் பாக்டீரியாக்கள் தங்கி சருமத்தில் பரவி, தீவிரமான நோய்களையும் ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
