விட்டுக் கொடுத்து கிடைத்த வாய்ப்பு- அருணா தங்கை உடைத்த உண்மையால் கிழிந்த முகத்திரை
அருணா தங்கை விட்டுக் கொடுத்த காரணத்தினால் அவருக்கு அன்றைய தினம் சூப்பர் சிங்கர் வாய்ப்பு கொடுத்தது என மேடையில் பேசியது அரங்கத்தினரை வியக்க வைத்துள்ளது.
பக்தி சூப்பர் சிங்கர்
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக செல்லும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் காயத்திரி டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.
அடுத்து, பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 என ஆரம்பமாகும் என எதிர்பார்த்த வேளையில் பக்தி பாடல்கள் அடங்கிய பக்தி சூப்பர் சிங்கர் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.
விட்டுக் கொடுத்த கிடைத்த பட்டம்
இந்த நிலையில், பக்தி பாடல்கள் வாயிலாக தங்களின் திறமைகளை போட்டியாளர்கள் காட்டி வருகிறார்கள். அதில், சூப்பர் சிங்கர் சீசன் 9 டைட்டில் வின்னரான அருணாவின் தங்கை கலந்து கொண்டுள்ளார்.
அருணா, சூப்பர் சிங்கர் சீசன் 9-ல் பக்தி பாடல்கள் சுற்றில் சிறப்பாக பாடியிருப்பார். அவரை போன்று திறமைக் கொண்ட தங்கைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசும் பொழுது, “என்னை எல்லோரும் அருணாவை வைத்து கச்சேரி செய்வதாக கூறுவார்கள். ஆனால் அது உண்மையில்லை, நான் தான் அன்றைய தினம் எனக்கு கிடைத்த வாய்ப்பை அக்காவிற்காக விட்டுக் கொடுத்தேன். தற்போது இந்த பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எனக்காகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்..” என பேசியிருந்தார்.
அவர் பேசியதை கேட்ட அரங்கத்தினர், அருணாவின் தங்கைக்கு ஆதரவு கொடுத்து கோல்டன் பஷர் வாங்கிக் கொடுத்துள்ளனர். இவர் தொடர்ந்து நிகழ்ச்சி பாடுவார் என ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அருணாவும் அவருடைய தங்கையும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியான சாடையில் தான் இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |