மனநிலை சரியில்லாமல் காணாமல் போன பிரபல சீரியல் நடிகர்.... தீயாய் பரவிய விளம்பரத்தின் பின்னணி என்ன?
சின்னத்திரை நடிகரான பாண்டிகமலை காணவில்லை என்றும் கண்டுபிடிப்பவர்களுக்கு லட்சக்கணக்கில் பரிசுத்தொகை என்று கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து பாப்புலரான நடிகராக இருந்து வருபவர் பாண்டி கமல். அவர் சில திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இந்நிலையில் கமலை காணவில்லை என குறிப்பிட்டு செய்தித்தாளில் விளம்பரம் வந்திருப்பதாக அவரே இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் அவரை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் சன்மானம் என்றும், நேரில் அழைத்து வருபவர்களுக்கு 25 லட்சம் ருபாய் சன்மானம் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பாண்டி கமல் "என்னது 25 லச்சமா.. ஓ My கடவுளே... அடடா....எனக்கே அந்த பயனே தெரியுமே பா.... Amount கேஷவா or Cheque va ???????" என கேட்டிருக்கிறார் அவர். இந்த பதிவை பார்த்து ஆச்சர்யம் ஆன ரசிகர்கள் 'இது புது சீரியலுக்காகவா?' என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்த விளம்பரத்தில் பெயர் சூர்யா என குறிப்பிடப்பட்டு இருப்பதால் அவர் அந்த தொடரில் சூர்யா என்ற மனநிலை பாதிக்கப்பட்ட நபராக தான் நடிக்கிறார் என தெரிகிறது.
View this post on Instagram
![]()
உங்களுக்கு பிடித்த நிறம் பச்சையா? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும் 16 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்மரண அறிவித்தல்மரண அறிவித்தல்(+44) 20 3137 6284UK(+41) 315 282 633Switzerland(+1) 437 887 2534Canada(+33) 182 888 604France(+49) 231 2240 1053Germany(+1) 929 588 7806US(+61) 272 018 726Australialankasri@lankasri.comEmail US