பேரழிவை தரப்போகும் பாபா வங்காவின் கணிப்பு : 82% உறுதி...இனி நடக்கப்போவது என்ன?
உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும், அவர்களில் பெரும் புகழ்பெற்றவர் பாபா வங்கா. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், தனது அதிசயமான கணிப்புகளால் உலகளவில் பெயர் பெற்றுள்ளார்.
பாபா வங்கா, 12வது வயதில் பார்வை இழந்ததற்குப் பிறகு, எதிர்காலத்தைப் பார்க்கும் ஒரு வலிமையான சக்தி அவருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் தனது வாழ்க்கை முழுவதும் பல முக்கியமான உலக நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து, எழுதிக் குறிப்பாக வைத்துள்ளார். அதிகம் பேசப்படுவது என்னவென்றால், அவர் கணித்த பல நிகழ்வுகள் ஆண்டாண்டு கடந்தும் உண்மையாக நடந்து விட்டுள்ளன.
உலக அரசியல், இயற்கை பேரழிவுகள், விஞ்ஞான வளர்ச்சிகள் உள்ளிட்ட பல துறைகளில் அவரது கணிப்புகள் பல முறை சரியாகியுள்ளது.
அவர் இறப்பதற்கு முன்பே, ஒவ்வொரு ஆண்டும் என்னென்ன நிகழ்வுகள் நடைபெறும் என்பதை நுட்பமாகக் கணித்து, குறிப்புகளாக பதிவு செய்ததாக நம்பப்படுகிறது.
பகீர் கணிப்பு
இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் சில முக்கியமான கணிப்புகள் நிகழ்நிலையில் உருவாகத் தொடங்கியுள்ளன. பாபா வங்கா 2025ஆம் ஆண்டு உலக அழிவின் தொடக்கமாக இருக்கும் என கூறியுள்ளார்.
மேலும், 5079ஆம் ஆண்டு பூமி அழிந்து விடும் என்றும், அப்போது மனிதர்கள் பூமியில் இருப்பதே இல்லையென்றும் அவர் கணித்திருந்தார். இதனுடன் தொடர்புடைய இன்னொரு முக்கியமான கணிப்பு — ஜப்பானில் மிகப்பெரிய பூகம்பமும் சுனாமியும் ஏற்படும் என்பது.
அவர் 2011ஆம் ஆண்டில் ஏற்பட்ட பேரழிவை விட இன்னும் மோசமான நிலநடுக்கங்கள் வரக்கூடும் என்றும் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், ஜப்பான் அரசு மற்றும் தேசிய பூகம்ப ஆய்வுக் குழுக்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, அடுத்த 30 ஆண்டுகளில் 7 ரிக்டர் அளவை அல்லது அதற்கு அதிகமான நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு 82% ஆக உயர்ந்துள்ளது, இது முன்னதாக 75% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
