Baakiyalakshmi: சுதாகருக்கு அடிமையாகிய கோபி... இனியா திருமணத்தில் ஏற்பட்ட சிக்கல்
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் ஹோட்டலை கேட்ட சுதாகர், தற்போது கோபியிடம் இனியாவை பெண் கேட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் காட்சியாகும்.
இனியாவின் காதல் பிரச்சனையால் கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி வாழ்ந்து வருகின்றனர்.
மூன்று மாதத்திற்கு பின்பு என்று கதையில் ஒரு திருப்பத்தை கொண்டு வந்துள்ளனர். இதில் இனியா படித்து முடித்து வேலைக்கு செல்கின்றார்.
பாக்கியாவின் ஹோட்டலுக்கு சுதாகர் என்ற வில்லன் வந்துள்ளார். ஆனால் பாக்கியா தனது ஹோட்டலை தரமுடியாது என்று சத்தம் போட்டு அனுப்பினார்.
ஆனால் சுதாகர் கோபியை அழைத்து அவரிடம் இனியாவை பெண் கேட்டு உறுதிபடுத்தியுள்ளார். இதனை பாக்கியாவிடம் கூற கோபி மற்றும் ஈஸ்வரி வந்துள்ளனர்.
ஆனால் பாக்கியா தனக்கு சம்மதம் இல்லை என்றும், இனியா இதற்கு சம்மதிக்க மாட்டாள் என்று கூறியுள்ளார். பாக்கியாவின் பேச்சை காதில் வாங்காத ஈஸ்வரி இனியாவின் திருமணம் கட்டாயமாக நடக்கும் என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |