நேரம் பார்த்து ஆப்படித்த கோபி.. சிக்கலில் பாக்யா: சப்போர்ட்டுக்கு வருவாரா பழனி?
“இன்னும் இரண்டு நாட்களில் நா கொடுத்த நேரம் முடிய போகுது” பாக்கியாவை பணம் கேட்டு மீண்டும் கோபி அசிங்கப்படுத்தியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலை இயக்குனர் டேவிட் இயக்கி வருகிறார். அத்துடன் , சுசித்ரா, ரித்திகா,திவ்யா கணேஷ் , வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள்.
பாக்கியலட்சுமி சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. வாரத்தில் திங்கள் முதல் சனி வரை ஒளிப்பரப்படுகின்றது.
இரண்டு திருமணம் செய்து கொண்டு முதல் மனைவியை அவமானப்படுத்தும் கோபியின் செயல் மக்கள் மத்தியில் இந்த சீரியல் ரீச்சாவதற்கு முக்கிய பங்காற்றுகின்றது.
பாக்கியாவை மீண்டும் அசிங்கப்படுத்தும் கோபி
இந்த நிலையில் வீட்டில் தொடர்ந்து பிரச்சினையாக இருப்பதால் பாக்கியாவை வீட்டை விட்டு வெளியேறுமாறு கோபியும் ராதிகாவும் கூறினார்கள்.
இதனால் கடுப்பான பாக்கியா “இது ஏ வீடு நீங்க தான் வெளியே போகனும்..” என கூறுகிறார். இதற்கான பணத்தை இன்னும் ஒரு மாதத்தில் தருவதாகவும் சவால் விட்டுள்ளார்.
இன்னும் ஒரு மாதம் காலம் முடிய இரண்டு நாட்கள் இருப்பதால் மிகுதியாக இருக்கும் 18 இலட்சத்தை தரும்படி கோபி பாக்கியாவை அசிங்கப்படுத்தியுள்ளார்.
ஆனால் பாக்கியாவிடம் தற்போது 8 இலட்சம் இருப்பதாகவும் இன்னும் 10 இலட்சம் தான் தேவை எனவும் பாக்கியா கணக்கு போட்டு பார்த்து கொண்டிருக்கிறார். இதனை பார்த்த கோபி பாக்கியாவிடம் வந்து“ உன்னால் என் பணத்தை கொடுக்க முடியாது..” என ஏளனமாக பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |