இயக்குநர் பாரதிராஜாவின் பரிதாப நிலை - மருத்துவர் கூறிய விடயம்
தமிழ் சினிமாவின் இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பெற்றதுபோன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாரதி ராஜா
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் தான் பாரதிராஜா. இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தன்னுடைய மகனின் இறப்பிற்கு பின்னர் இவர் சினிமா பக்கம் ஆர்வம் காட்டவில்லை.
கடந்த சில மாதங்களாக பாரதி ராஜா தன்னுடைய மகள் வீட்டில் வசித்து வந்த நிலையில் அண்மையில் சென்னைக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பாரதிராஜா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவரை மருத்துவமனை அழைத்து சென்றுள்ளனர்.
இவருக்கு தீவிரமான நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது இதற்காக அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பாரதிராஜா உடல் சிகிச்சைக்காக மிகவும் நுணுக்கமான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார் என மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
அவரது உடல்நிலை தற்போது சீராக இருந்தாலும் அவர் தீவிர சிகிச்சை தொடர்ந்து பெற வேண்டி இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பாரதிராஜாவை சீமான், இயக்குநர்கள் லிங்குசாமி, ஏஆர் முருகதாஸ், அமீர், ஃபெப்சி தலைவர் ஆர்.கே. மணி, தயாரிப்பாளர் எஸ் தாணு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று சந்தித்துள்ளனர்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அவருக்கு சிகிச்சையளித்து வரும் பெண் மருத்துவர் இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பாரதிராஜா உடல் நிலை மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார்.

இது பாரதிராஜாவா எனக் கேட்கும் அளவுக்கு அவரின் தோற்றமே மாறியிருக்கிறது.
புகைப்படத்தை வெளியிட்ட அந்த பெண் மருத்துவர் புகைப்படத்துடன் "இயக்குநர் இமயம் பாரதிராஜா சார் அவர்களின் மருத்துவக் குழுவில் இடம்பெற்றதை பெறும் பாக்கியமாக கருதுகிறேன், நான் எனது மருத்துவப் பணியைத் தொடங்கிய பிறகு, நான் கவனித்துக் கொண்ட முதல் நோயாளி அவர்தான். என பதிவிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |