மீண்டும் இனியாவுடன் இணையும் விஷால்.. ஒரே பதிவில் அன்பை பொழிந்த நேஹா
பாக்கியலட்சுமி சீரியல் இனியா, விஷாலுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருவருக்கும் இடையிலான உறவை தெளிவுப்படுத்தியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் பாக்கியா, கணவரின் உதவி இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை எப்படி பார்த்து கொள்கிறார் என்பதனை கருவாக வைத்து எடுக்கபட்டு வருகிறது.
இதற்கிடையில் இனியாவுக்கு ஆகாஷை இரண்டாவது திருமணம் செய்து வைக்க வீட்டிலுள்ளவர்கள் முடிவு செய்து, அதற்கான வேலைகள் சீரியலில் நடந்து கொண்டிருக்கிறது.
சீரியலின் இறுதிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தாலும், எபிசோட்களில் இறுதி காட்சிகள் இதுவரையில் வரவில்லை.
இனியா போட்ட பதிவு
இந்த நிலையில், சீரியலில் இப்படி இனியாவின் வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் சென்றுக் கொண்டிருக்கையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நேஹா என்கிற இனியா, பாக்கியலட்சுமி சீரியல் விஷால் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், “நான் இதை முன்பே சொல்லியிருக்கிறேன், இப்போதும் சொல்கிறேன், இன்னும் ஆயிரம் முறை சொல்வேன் பாக்கியலட்சுமி படப்பிடிப்பில் இந்த 6 வருடங்களில், என் வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதிகளில் ஒருவராக மாறிய ஒருவரை நான் சந்தித்தேன். அவர் என் மோசமான நிலையைப் பார்த்திருக்கிறார், என் தடிமனான நிலையிலும் என்னுடன் நின்றிருக்கிறார்.
ஒரு முறை கூட விட்டுக்கொடுக்கவில்லை, அவர் என் பயணத்தைக் கண்டது மட்டுமல்லாமல், அதற்கு முழு மனதுடன் இடம் கொடுத்தார்! எனக்குப் பிடித்த மனிதர். அவர் எப்போதும் அப்படித்தான் இருப்பார். என் இனியாவுக்கு எழில்.. என் லட்டுக்கோவுக்கு விஷாலு!.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், “ அந்த பந்தம் ரொம்ப அழகா இருக்கு, அன்பு, அக்கறை, முடிவற்ற நினைவுகள் எல்லாம் நிறைந்தது.” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
