Baakiyalakshmi: கெத்துக் காட்டிய சுதாகரை வாயடைக்க வைத்த இனியா.... அப்படியென்ன செய்தார்?
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா தனது மாமனார் மாமியாரை பயங்கரமாக விளாசி எடுத்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண், கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்த்துள்ளார்.
இதற்கிடையே பல சிக்கல்களை சந்தித்து கடைசியாக ஹோட்டல் தொழிலிலும் கொடிகட்டி பறக்கின்றார். இதற்கு இடையூறாக சுதாகர் வந்து பாக்கியா ஹோட்டலை அபகரித்த நிலையில், அதிலிருந்தும் மீண்டு வந்துள்ளார்.
பாக்கியாவிற்கு உதவியாக கோபி இருக்கும் நிலையில், தற்போது இனியா வீட்டில் அவருக்கு பிரச்சனை எழுந்துள்ளது.
இனியா வெளியே நின்று இரண்டு முறை பெல் அடித்துள்ள நிலையில், அவர்கள் கதவை வேண்டுமென்றே திறக்காமல் இருந்துள்ளனர்.
இதனால் இனியா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்பு இனியாவின் பெற்றோர் சுதாகர் வீட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இதுகுறித்து இனியாவிடம் மாமனார், மாமியார் கேள்வி எழுப்பிய நிலையில், இனியா சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |