Baakiyalakshmi: ராதிகாவை உதறித் தள்ளிய கோபி... பேரதிர்ச்சியில் பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக ஈஸ்வரி கூறியுள்ள நிலையில் கோபியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அவர் துணையில்லாமல் வாழ்ந்து காட்டும் கதையை கொண்டு செல்கின்றது.
கணவர் எவ்வளவு தான் கெட்டவனாக இருந்தாலும், தான் செய்ய வேண்டிய கடமைகளை தற்போது வரை பாக்கியா சரியாக செய்து அசத்தி வருகின்றார்.
சமீபத்தில் கோபிக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பாக்கியா காப்பாற்றியுள்ளார்.
இந்நிலையில் கோபி தற்போது நலமாக உள்ள நிலையில் ஈஸ்வரி தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல கூறியுள்ளார். ராதிகாவும் தனது வீட்டிற்கு வருமாறு கோபியை அழைத்துள்ளார்.
ஆனால் கோபி அம்மாவின் பேச்சைக் கேட்டு ஈஸ்வரியுடன் செல்வதாக கூறி ராதிகாவை உதறித் தள்ளியுள்ளார். ஈஸ்வரி எடுத்த முடிவால் பாக்கியா மற்றும் ராதிகா இருவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |