Baakiyalakshmi: பாக்கியாவிடம் சண்டையிட்ட சுதாகரை எச்சரித்த கவுன்சிலர்
பாக்கியலட்சுமி சீரியலில் சுதாகர் மகனை இனியாவின் அண்ணன்கள் தாக்கிய நிலையில், இதனால் கோபமடைந்த சுதாகர் பாக்கியாவிடம் சண்டையிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண், கணவர் விட்டுச் சென்ற பின்பும் தனது விடாமுயற்சியினால் சொந்த உழைப்பில் குடும்பத்தை காப்பாற்றி வருவது கதையாகும்.
கோபி தற்போது பாக்கியாவுடன் இருந்து வரும் நிலையில், இனியாவிற்கு செய்து வைத்துள்ள திருமணம் தற்போது பிரச்சனையாகியுள்ளது.
அதாவது இனியாவின் கணவர் நித்திஷ் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்று குடும்பத்தினருக்கு தெரிந்த நிலையில், அண்ணன்மார்கள் சுதாகர் வீட்டிற்கு சென்று நித்திஷை அடித்துள்ளனர்.
இதனால் கோபத்தில் கொந்தளித்த சுதாகர் பாக்கியாவை எச்சரித்துள்ளார். உடனே பாக்கியாவிற்கு ஆதரவாக கவுன்சிலர் சுதாகரை எச்சரித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |