தூக்கத்தில் பெண்ணுக்கு நடந்த அவலம்.... விழித்து பார்த்த போது காத்திருந்த பேரதிர்ச்சி
அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தூக்கத்தில் கண்களை ஏதோ கடிப்பதுபோல் தெரியவே பதறிப்போய் விழித்துள்ளார்.
பிறகு பார்த்தால், எலி ஒன்று அவரது கண்களை சுவைத்துக்கொண்டிருந்திருந்திருக்கிறது.
உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவை துவம்சம் செய்து கொண்டிருக்கின்றன எலிகள், ஒன்றல்ல இரண்டல்ல, பல மில்லியன் எலிகள்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்தப் பெண்.
Mick Harris என்னும் விவசாயி, தன் முகத்தின்மீது ஏதோ ஓடுவதை உணர்ந்து பதறி விழித்திருக்கிறார்.
பார்த்தால் அதுவும் ஒரு எலி. அவரது மனைவியின் மோதிர விரலை சுவைக்க முயன்றிருக்கிறது மற்றொரு எலி. அவுஸ்திரேலியாவில் எலித்தொல்லையை தேசிய பேரழிவாக அறிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.