நன்றாக சுமப்பதால் கனமாக இல்லை என்று அர்த்தம் கிடையாது : ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு!
விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் ஆர்த்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடும் ஒவ்வொரு பதிவும் நெட்சன்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றது.
இந்நிலையில், ஆர்த்தி ரவி ட்ரெண்டிங் சேலையில் தங்க சிலை போல் காட்சியளிக்கும் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் இவர் குறிப்பிட்டுள்ள பதிவும் கவனம் பெற்று வருகின்றது.
ரவி மோகன்- ஆர்த்தி
ரவி நடிகர் ரவி மோகனின் குடும்ப பிரச்சனை தான் அண்மை காலமாக இணையத்தில் பயங்கர வைரலாக பேசப்பட்டது.
ரவி மோகன் ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த வருடம் இவர்கள் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ரசிகர்களை இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது அதனை தொடர்ந்து குடும்ப பிரச்சினையை மாறி மாறி அறிக்கை வெளியிட்டு பொது பிரச்சிகையாகவே மாற்றினார்கள்.
மேலும் ஜெயம் ரவி பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக வெளி நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதும் பெரும் பேச்சுப் பொருளாக மாறியது.
அண்மையில் நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியின் போது கெனிஷாவுடன் ரவி மோகன் ஒரே நிற ஆடையில் பங்கேற்றதுடன் கொனிஷா தான் தன் வாழ்வில் கிடைத்த கடவுளின் பரிசு என பேசியிருந்தார். குறித்த விடயம் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆர்த்தி ரவி அழகிய புகைப்படங்களுடன், காலம் பதிப்புகளை அழித்து, மௌனத்தில் அவளை மீண்டும் எழுதுகிறது.அதனால்தான் நீங்கள் அவளை மீண்டும் சந்திக்க மாட்டீர்கள் - அவளும் கூட. அது இழப்பு அல்ல. அது வளர்ச்சி. அவள் ஒருபோதும் முடிக்கப்படவில்லை, எப்போதும் மாறிவிடுகிறாள் என்பதற்கு இது சான்றாகும்... என குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
