பனிப்பாறையில் 500 ஆண்டுகள் பழமையான பொக்கிஷம்! இப்படி ஒரு அதிசய மெழுகுவர்த்தி பெட்டியா?
நார்வேயில் லெண்ட்பிரீன் பனிப்பாறை பகுதியின் மலைகளில் தேன் மெழுகு எச்சங்கள் அடங்கிய 500 ஆண்டுகள் பழமையான மரப்பெட்டியை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட போது மரப்பெட்டியில் அதன் மூடி இருந்ததாக கூறப்படுகிறது.
நார்வேயில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு, உருகும் பனிப்பாறைகள் பல ஆச்சரியங்களை தருவதாக தெரிவித்துள்ளனர்.
சீக்ரெட்ஸ் ஆஃப் தி ஐஸ் பக்கத்தின் பேஸ்புக் பதிவின் படி, கலாச்சார வரலாற்று அருங்காட்சியகம் கண்டுபிடிக்கப்பட்ட பெட்டியின் உள்ளடக்கங்களை ஆராய்ந்தது.
அதன்படி பெட்டியில் இருந்த சில மெழுகு எச்சங்கள் தேன் மெழுகு என்று கண்டறியப்பட்டது. ரேடியோ கார்பன் டேட்டிங் மூலம் அந்த பெட்டி பைன்வுட்டால் செய்யப்பட்டது என்றும் அது கி.பி 1475-1635 ஆம் ஆண்டிற்கு முந்தையது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.