என் பிள்ளைக்கு தாய்மாமன் இவர் தாங்க: மேடையில் கதறி அழும் நிஷா
பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டும் பங்கேற்று அசத்திய நடன நிகழ்ச்சியான பிக்பாஸ் ஜோடிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
நடுவர்களாக ரம்யா கிருஷ்ணனும், நகுலும் கலந்துகொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியின் சமீபத்தில் ப்ரோமோவில் நிஷா மிகவும் உருக்கமாக பேசுகிறார், அதில், என்னுடைய குழந்தை பிறந்து 60 ஆவது நாளில் கார் கவிழ்ந்த விபத்து நடந்துச்சு,
அப்போது ஆம்புலன்ஸ் ஸ்பீடில் வந்து உதவியர் ஈரோடு மகேஷ், அப்போது அவர் சொன்ன வார்த்தை உன் குழந்தை இன்னைக்கு இவ்வளவு அழுதுருக்கு, வாழ்க்கையில் இனி அழவே அழாது என்று சொன்னாரு, இன்னைக்கு வரைக்கும் என் குழந்தை அழுகலை,
எங்களுக்கு இடையே எந்த தொப்புள் கொடி உறவும் கிடையாது, என்னுடைய சகோதரனுக்கு நன்றி, என்னுடைய குழந்தை சஃபா, மகேஷ் அண்ணனுக்கு சீர் செய்யணும் என்று ஆசைப்படுகிறாள், என்று மகேஷின் நெஞ்சில் சாய்ந்து கண்கலங்கியதுடன் சீரும் செய்கிறார்.
இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் ஈரோடு மகேஷ்க்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.