குடிபோதையில் வரும் கார்த்திக்- அன்னம் செய்த உதவி.. கெடுத்து விட்டு வேடிக்கை பார்க்கும் மாமியார்
ரம்யா செய்யும் கொடுமையாக இரவு வீட்டிற்கு கார்த்திக் குடிபோதையில் வரும் பொழுது அன்னம் உதவி செய்கிறார். ஆனால் மாமியார் செய்த வேலையால் அனைத்தும் மொத்தமாக மாறியுள்ளது.
அன்னம் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் அன்னம்.
இந்த சீரியலில் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் தன்னுடைய மாமனாருக்காக எதையும் செய்யலாம் என போராடும் மருமகளின் கதையாக உள்ளது. அந்த மாமனாருக்காக பிடிக்காத கார்த்திக்கை அன்னம் திருமணம் செய்து கொள்கிறார்.
ஆனால் கார்த்திக் ரம்யா என்ற பெண்ணை காதலித்து வருகிறார். இது வீட்டிலுள்ள யாருக்கு தெரியாத காரணத்தினால் அன்னம் திருமணம் நின்ற போது அவரை திருமணம் செய்து வைத்து விட்டனர். ஆனால் அன்னத்தை திருமண செய்த நாள் முதல் கார்த்திக் தினமும் ரம்யாவை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிக்கிறார்.
இது தெரியாத ரம்யா கார்த்திக் ஊருக்கே கமிஷனாராக வந்து அலப்பறை செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், கார்த்திக்கை தினமும் தொல்லை செய்து வரும் ரம்யாவுக்கு என்ன சொல்வது என தெரியாமல் கார்த்திக் மனதிற்குள்ளேயே சில விடயங்களை வைத்து புலம்பி வருகிறார்.
குடிபோதையில் வந்த கணவருக்கு உதவிய அன்னம்
இப்படியொரு சென்றுக் கொண்டிருக்கையில் மனக்கஷ்டம் தாங்க முடியாமல் கார்த்திக் வீட்டிற்கு நன்றாக குடித்து விட்டு குடிபோதையில் வருகிறார். இதனை வீட்டிற்கு யாரும் சொல்லாமல் அன்னம் தனியாக நின்று சமாளிக்கிறார்.
மறுநாள் காலை எழுந்து கார்த்திக் செல்லும் வண்டியை நன்றாக கழுவி, துடைத்து வைக்கிறார். இதனை கவனித்த மாமியார் பெற்றோல் பங்கிற்கு செல்லும் குழாயை கழட்டி விடுகிறார். இதனால் பெற்றோல் எல்லாம் கீழே சிந்தி விட்டது.
அன்னம் கழுவியதால் தான் இந்த குழாய் கழண்டு விட்டது என புரிந்து கொண்ட கார்த்திக், அன்னத்தை அழைத்து கடுமையாக திட்டி விடுகிறார். இவற்றையெல்லாம் ஓரமாக நின்று மாமியார் ரசிக்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |