இயற்கையின் படைப்பில் கற்களுக்கு நடுவே இருக்கும் நீச்சல் குளம்! இதை விட பிரமிக்க வைக்கும் அதிசயம் உண்டா?
இயற்கையின் படைப்பில் கற்களுக்கு நடுவே இருக்கும் நீச்சல் குளம் ஒன்றின் புகைப்படத்தைப் பார்த்து ஆனந்த் மகேந்திரா வியந்துள்ளார்.
இந்தியாவின் முக்கிய தொழில்திபர்களில் ஒருவரான ஆனந்த் மகேந்திரா, டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.
தனக்கு பிடித்த வீடியோ மற்றும் தகவல்களை பகிரும் அவர், தற்போது இயற்கையின் படைப்பில் உருவாகியிருக்கும் நீச்சல் குளத்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
புகைப்படத்தில் இருக்கும் குளம் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ள மகேந்திரா, இதுபோன்ற நீச்சல் குளத்தை இதுவரை பார்த்ததில்லை என வியந்துள்ளார்.
Whaaaat?? I’ve never seen anything like this. This HAS to go in my travel bucket list as the ultimate swimming experience. Where exactly is this @Sidbakaria ? Need GPS coordinates! https://t.co/lfOciyiCyQ
— anand mahindra (@anandmahindra) July 6, 2021
தன்னுடைய பயண குறிப்பில் அந்த இடமும் இடம்பெற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். புகைப்படத்தை பகிர்ந்த நெட்டிசனிடம், கற்களுக்கு நடுவே அமைத்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் நீச்சல் குளம் எங்கிருக்கிறது? என்றும் வினவினார்.
அவரின் பதிவுக்கு பதில் அளித்த பக்காரியா, என்னுடைய டிவிட்டர் பதிவை பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி சார் எனத் தெரிவித்துள்ளார்.
உத்தரக்காண்ட் மாநிலத்தில் தார்ச்சுலா மாவட்டத்தில் உள்ள கெலா என்ற கிராமத்தில் இந்த இயற்கையான நீச்சல் குளம் அமைத்திருப்பதாக தெரிவித்த பக்காரியா, இந்தியா - நேபாளம் எல்லைக்கு மிக அருகில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.