இந்திய கோதுமை மறு ஏற்றுமதிக்கு அமீரகம் தடை செய்தது ஏன்? இதுதான் காரணமாம்!
உலகின் இரண்டாவது தானிய உற்பத்தியாளரான இந்தியாவில் இருந்து வரும் கோதுமையை மறு ஏற்றுமதி செய்ய 4 மாதங்கள் ஐக்கிய அமிரகம் தடைவிதித்திருந்தது.
இதனிடையே தடை விதித்தற்கான காரணம் என்னவென்றால், வளைகுடா நாட்டின் பொருளாதார அமைச்சகம் அதன் நடவடிக்கைக்கு உலகளாவிய வர்த்தக இயக்கத்தில் உள்ள தடங்கல்களை காரணம் காட்டியது. எனினும், உள்நாட்டு நுகர்வுக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது என்று அமைச்சகம் கூறியிருக்கிறது.
ஏற்கனவே வழங்கப்பட்ட கடன் கடிதங்களை (LCs) கொண்ட நாடுகள் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய விரும்பும் நாடுகளைத் தவிர பிற நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதியை மே 14 அன்று இந்தியா தடை செய்தது.

அப்போது இருந்து, 469,202 டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய அனுமதித்துள்ளது. இதனால் இந்தியாவின் இடைநிறுத்தம் தொடங்கிய மே 13-க்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்திய கோதுமையை ஏற்றுமதி அல்லது மறு ஏற்றுமதி செய்ய விரும்பும் நிறுவனங்கள் முதலில் பொருளாதார அமைச்சகத்திடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஐக்கிய அரபு அமீரகமும் இந்தியாவும் பிப்ரவரியில் ஒரு பரந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இதில் இரு நாடுகளின் பொருட்கள் மீதான அனைத்து கட்டணங்களையும் குறைக்க கோரிக்கை உள்ளது.

மேலும் 5 ஆண்டுகளில் தங்கள் வருடாந்திர வர்த்தகத்தை 100 பில்லியன் டாலர்களாக உயர்த்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. விரிவான பொருளாதார கூட்டு வர்த்தக ஒப்பந்தம் (CEPA) எனப்படும் இந்த ஒப்பந்தம் மே 1ம் தேதி அமலுக்கு வந்தது.
2020-ம் ஆண்டில் உலகின் மொத்த கோதுமை உற்பத்தியில் 14.14 சதவீதத்தை இந்தியா கொண்டிருந்தது. ஆனால் உலக வர்த்தகத்தில் முதல் பத்து கோதுமை ஏற்றுமதியாளர்களில் இந்தியா இல்லை.
இருந்தாலும், அதன் ஏற்றுமதி பங்கு 2016 இல் 0.14 சதவீதத்திலிருந்து 2020 இல் 0.54 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அரசாங்க அறிக்கை கூறுகிறது.