சிக்கன் பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி! பண்ணலாமா?
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால் நன்றாக சமைத்து சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.
அந்த வகையில் சன்டே ஸ்பெஷலாக வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில், அசைவமே தோற்றுப்போகும் அளவுக்கு மீல் மேக்கரை வைத்து சிக்கன் பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் சோயா பிரியாணியை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சீரகச் சம்பா அரிசி - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
மீல் மேக்கர் - 1 கப்
அரைத்த மிளகாய் விழுது - 1 தே.கரண்டி
பூண்டு விழுது - ஒன்றரை தே.கரண்டி
இஞ்சி விழுது - ஒன்றரை தே.கரண்டி
புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - ஒன்றரை கப்
தயிர் - 3 தே.கரண்டி
எலுமிச்சைச் சாறு - 2 தே.கரண்டி

தாளிக்க தேவையானவை
நெய் - 2 தே.கரண்டி
எண்ணெய் - 1 தே.கரண்டி
கிராம்பு - 2
இலவங்கப்பட்டை -2 இன்ச்
ஏலக்காய் - 2
செய்முறை
முதலில் கிண்ணத்தில் 6 வர மிளகாயைக் உடைத்து, சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும். காஷ்மீரி மிளகாயை பயன்படுத்தினால் நிறம் நன்றாக இருக்கும்.
அதனையடுத்து தேவையான அளவு நீர் சேர்த்து, இஞ்சியை மென்மையான விழுதாக அரைத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.பின்னர், பூண்டையும் அரைத்து விழுதாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்து குமிழ்கள் வந்ததும், சோயா துண்டுகளைச் சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும். மீல் மேக்கர் தண்ணீரில் ஊறி, இருமடங்கு பெரிதாகும் வரை அப்படியே விடவும்.
அதனையடுத்து ஒரு குக்கரை அடுபபில் வைத்து சூடானதும், நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடாக்கி எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில், பூண்டு விழுதைச் சேர்க்கவும், பூண்டின் பச்சை வாசனை போனதும், இஞ்சி விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும். இவையனைத்தையும் நன்றாகக் கலக்கவும். பின்னர் அரைத்த மிளகாய் விழுதைச் சேர்த்து, மீண்டும் நன்றாகக் கலந்துக்கொள்ள வேண்டும்.

பின்பு அதில், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து மென்மையாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் சோயா துண்டுகளைப் பிழிந்து சேர்த்து நன்றாகக் கலந்துதுவிட்டு, வதக்கிக்கொள்ள வேண்டும். இறுதியாக புதினா, கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறிக்கொள்ள வேண்டும்.

தயிர், போதுமான அளவு தண்ணீர் மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும். அது நன்றாகக் கொதிக்க விட வேண்டும்.
பின்னர் சீரக சம்பா அரிசியைக் கழுவி, கொதிக்கும் நீரில் சேர்க்கவும். குக்கரை மூடி குறைந்த தீயில் வைத்து, ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில், ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |