போர் சூழலால் ரத்தான விமான சேவை : துபாயில் சிக்கிய நடிகர் அஜித்! வெளியான தகவல்
மத்திய கிழக்கு நாடுகளில் திடீரென ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் வான்வழித் தாக்குதல்களால் சர்வதேச விமானப் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில், துபாயில் இருக்கும் நடிகர் அஜித்குமாரின் பாதுகாப்பு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதால் ரசிகர்கள் பதற்றத்தில் உள்ளனர்.
நடிகர் அஜித்குமார்
90களில் திரைக்கு வந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும் நடிகர் தான் அஜித்குமார். காதல் மன்னன், ஆக்ஷன் ஹீரோ, வில்லன் என பல வேடங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகர்களில் ஒருவர்.

இவரை தல என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருவகின்றனர். அஜித் நடிப்பில் இதுவரையில் 63 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் இறுதியாக "குட் பேட் அக்லி" (Good Bad Ugly) திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அஜித் நடிக்கும் 64வது திரைப்படத்திற்கு AK 64 என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.அபுதாபியின் புகழ்பெற்ற யாஸ் மரினா சர்க்யூட்டில் அந்த கார் ரேஸ் இடம்பெற்று வந்தது.
தற்போது, மத்திய கிழக்கு நாடுகளில் திடீரென ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் வான்வழித் தாக்குதல்களால் சர்வதேச விமானப் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில், துபாயில் இருக்கும் நடிகர் அஜித்குமாரின் பாதுகாப்பு குறித்து சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், அஜித் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் இந்த பதற்றச் சூழல் முடிவடைந்ததும் சென்னை திரும்புவார் எனவும் அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா பிரபல ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், துபாயில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழல் மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நிலைமைக்கு திரும்பிய பின்னர் அவர் சென்னை திரும்புவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |