ஏர்டெல் வழங்கும் புதிய கிரெடிட் கார்ட் - ஈஸியாக பயன்படுத்துவது எப்படி?
ஏர்டெல் நிறுவனம் கடந்த நாட்களுக்கு முன்பு ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து நிதிச் சேவைகளை வழங்குவதாக அறிவித்தது. இது தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கான கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுடன் தொடங்குகிறது.
வாடிக்கையாளர்களுக்கு உடனடி கடன்களை 'இப்போது வாங்குங்கள் பிறகு செலுத்துங்கள்' எந்தந்த சலுகையில் மூலம் வழங்க இருக்கிறது.
ஆக்சிஸ் பேங்க் புதிய திட்டம்
இதனிடையே, ஏர்டெல் ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக்குகள் மற்றும் சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குகிறது. இதன்மூலம் தகுதியான ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நன்றி செயலி மூலம் கிரெடிட் கார்டு கிடைக்கும்.
மேலும், ஆக்சிஸ் வங்கியானது ஏர்டெல் வழங்கக்கூடிய பல்வேறு சேவைகளையும் பயன்படுத்தும். கிளவுட் மற்றும் டேட்டா சென்டர் சேவைகள் போன்றவற்றை இயக்க அனுமதிக்கும்.
அதுமட்டுமின்றி ஆக்சிஸ் வங்கி, ஏர்டெல்லின் மெஸேஜிங் தளம், வீடியோ, ஸ்ட்ரீமிங், கால் மாஸ்கிங் மற்றும் விர்ச்சுவல் கான்டெக்ட் போன்ற டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தும்.
இந்த கூட்டணியின் மூலம் ஏர்டெல்லின் 340 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு ஆக்சிஸ் வங்கியின் கடன் மற்றும் பல்வேறு டிஜிட்டல் நிதிச் சலுகை கிடைக்கும் என கூறப்படுகிறது.