இலங்கை அகதிக்கு கைக் கொடுத்த அகரம்.. கெத்தாக மேடையில் நெகிழ்ந்த தருணம்
அகரம் பவுண்டேஷன் (Agaram Foundation) இலங்கை பெண் ஒருவருக்கு செய்த உதவியை ஆண்டு விழாவில் கூறி மகிழ்ந்துள்ளார்.
அகரம்
அகரம் பவுண்டேஷன் (Agaram Foundation) என்ற நிறுவனத்தை மாணவர்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்ற நோக்கில் நடிகர் சூர்யா ஆரம்பித்துள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு 160 மாணவர்களுடன் இந்த நிறுவனம் செயல்பட ஆரம்பித்துள்ளது.
நாம் காணாத சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதே இவர்களின் நோக்கமாக இருந்தது.
அகரம் பவுண்டேஷனின் புதிய அலுவலகம் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அ திறப்பு விழாவில், மாணவர்கள் "கல்வியே எங்கள் ஆயுதம்" என்று உறுதிமொழி ஏற்றனர்.
அகதிக்கு வாய்ப்பளித்த அகரம்
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் நடிகர் சூர்யா செய்த உதவியால் சாதனை படைத்தவர்கள் அகரம் பவுண்டேஷனின் 15ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் மாணவர்கள் பட்ட கஷ்டங்கள், கிடைத்த பலன்கள், கண்டுபிடிப்புக்கள் உள்ளிட்ட அனைத்தையும் மாணவர்கள் கண்ணீருடன் பகிர்ந்துள்ளனர்.
அதில் பேசிய இலங்கை பெண்,“ நான் இலங்கையில் இருந்து இந்தியா வந்த குடும்பத்தை சார்ந்தவர். ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தேன். நான் இலங்கையில் இருந்து வந்த அகதி என்பதால் வழக்கறிஞராக படிக்க கல்லூரிகளில் வாய்ப்பு கொடுக்கவில்லை.
அப்போது அகரம் பவுண்டேஷனுக்கு வந்தேன். எந்த கல்லூரியில் வாய்ப்பு இல்லை என்றார்களோ அதில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 5 வருடங்கள் பயிற்சி பெற்று, தனியாக வழக்கு எடுத்து வாதாடி வருகிறேன். இலங்கையில் இருந்து வந்து வழக்கறிஞராகிய முதல் பெண்..” என கெத்தாக கூறியுள்ளார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
