7 மாத கர்ப்பிணி மனைவியின் உறவை கண்டுப்பிடித்த கணவன்.. பின்பு இருவரும் எடுத்த அதிர்ச்சி முடிவு!
ஈரோடு மாவட்டம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் கமல் பிரசாத். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வநாயகி என்ற பெண்ணிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
இதையடுத்து, தற்போது செல்வநாயகி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். மேலும், செல்வநாயகி திருமணத்திற்கு முன் வேறு ஒருவருடன் பழகி வந்துள்ளார்.
ஏற்கனவே, மகளின் காதல் விஷயத்தை அறிந்த அவரது பெற்றோர் அவசர அவசரமாக கமல் பிரசாத்திற்கு திருமணம் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், செல்வநாயகியின் காதல் குறித்து கடந்த நான்கு நாட்களுக்கு முன் கணவர் கமல் பிரசாத்திற்கு தெரிய வந்துள்ளது. இதனால், தனது மனைவியிடம், திருமணத்துக்கு முன் காதல் விவகாரத்தை கூறி இருக்கலாமே என்று கேட்டு சண்டையிட்டதாக தெரிகிறது.
தனது காதல் விஷயம் கணவருக்கு தெரிய வந்ததால் மனவேதனை அடைந்த செல்வநாயகி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மேலும், மனைவி உயிரிழந்ததை அறிந்த கமல்பிரசாத் வேதனையில், விஷம் குடித்து விட்டு காரில் வேகமாக சென்று ஒரு லாரியில் மோதி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த கமல்பிரசாத், கோபியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
செல்வநாயகிக்கு திருமணம் நடந்து ஒரு வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்கள்.