80 கோடி சொத்தை தானம் செய்த நடிகை இப்போ என்ன செய்கிறார்?
ஒரு நடிகை தான் சினிமாவின் மூலம் சம்பாதித்த 80 கோடி சொத்தை தானமாக வழங்கி உள்ளார்.
சொத்தை தானம் செய்த நடிகை
சினிமாவில் சம்பாதித்த தன்னுடைய 80 கோடி ரூபாய் பணத்தை கோவிலுக்காக தானம் செய்துள்ளார். திரை துறையில் மட்டும் இவர் 45 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.
அந்த நடிகை வேறு யாருமில்லை கடந்த 1964ஆம் ஆண்டு வெளியான காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் அறிமுக நடிகையான காஞ்சனா தான் அவர்.
காதலிக்க நேரமில்லை (1964) படத்தைத் தொடர்ந்து, அதே கண், பாமா விஜயம், அந்தஸ்து, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார்.
வைஜெயந்திமாலாவின் தாயாரான வசுந்தரா தேவி ஏற்கனவே இருந்ததால், இயக்குநர் ஸ்ரீதர் இவரின் பெயரை காஞ்சனா என மாற்றினார்.

இவரின் உண்மையான பெயர் வசுந்தரா தேவி. இவர் தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் தன் நடிப்பு திறமையை காட்டி மக்கள் மனதில் நீங்கா இம்பிடித்துள்ளார்.
2005-ல் தமிழ்நாடு மாநில திரைப்பட கௌரவ விருது (MGR விருது) மற்றும் 2007-ல் ANR சுவர்ண கங்கணம் விருது பெற்றார். இவர் சம்பாதித்த கோடிக்கணக்கான சொத்துக்களை அவரின் உறவினர்கள் அபகரித்து கொண்டதாக அவர் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.
இந்த அபகரித்த சொத்துக்கள் தன்னிடம் வந்து சேர்ந்தால் அதை திருப்பதி கோவிலுக்கு எழுதி வைப்பதாக தான் வேண்டி கொண்டார் என வசுந்திரா தேவி கூறி இருந்தார்.

இதன் பின்னர் தன்னுடைய சொத்துக்களை எப்படியோ நீதிமன்ற வழக்கில் போராடி கைப்பற்றியும் இருக்கிறார்.
இப்படி கிடைத்த சொத்தை அவர் வேண்டியது போலவே திருப்பதி கோவிலுக்கு தானமாக எழுதி வைத்துள்ளார். ஆனால் தான் வேண்டியது படி சொத்தை எழுதி வைத்த அந்த குணம் போற்றதக்கது.
இதன் பின்னர் தமிழ் சினிமாவில் நடித்து மக்கள் மனதின் நாயகியாக இருந்த இவர் 1980-களின் மத்தியில் திரைப்படங்களில் இருந்து ஓய்வு பெற்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |