திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை சனம் ஷெட்டி! என்ன ஆச்சு?
நடிகை சனம் ஷெட்டி தான்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தற்போது அவரே வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சனம் ஷெட்டி
தமிழ் சினிமாவில் “அம்புலி” போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர் தான் நடிகை சனம் ஷெட்டி.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
அதே நேரத்தில் மாடலிங் துறையிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

திரையுலகப் பணிகளுடன் மட்டுமல்லாமல், சின்னத்திரை உலகிலும் அவர் பிரபலமானவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சுமார் 64 நாட்கள் வீட்டுக்குள் இருந்து விளையாடினார்.
அந்த நிகழ்ச்சி அவருக்கு கூடுதல் ரசிகர் வட்டத்தை உருவாக்கிக்கொடுத்தது. நடிகையாக மட்டுமல்லாது, சமூக பிரச்சினைகளில் தனது கருத்துகளை வெளிப்படையாக பேசும் துணிச்சலான பெண்ணாகவும் அவர் அறியப்படுகிறார்.

நாட்டில் நடைபெறும் சில நிகழ்வுகள் அல்லது தன்னை தவறாக தோன்றும் விஷயங்கள் குறித்து அவர் தைரியமாக தனது கருத்துகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.
சினிமாவில் பெரிய அளவிலான முன்னேற்றம் பெறவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவர் மிகவும் பிரபலமாக உள்ளார். உடற்பயிற்சி வீடியோக்கள், கவர்ச்சியான புகைப்படங்கள் போன்றவற்றை தொடர்ந்து பகிர்ந்து தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது சனம் ஷெட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு சிறிய அறுவை சிகிச்சையொன்று நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் எடுத்த புகைப்படங்களை அவர் பகிர்ந்த நிலையில், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் “விரைவில் குணமடைய வேண்டும்” என்று கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |