திருமணத்திற்கு பின்பு முதன்முறையாக தனியாக வந்த நயன்தாரா! காதல் கணவர் விக்கியை தேடும் ரசிகர்கள்
நடிகை நயன்தாரா தனது காதல் கணவர் விக்கி இல்லாமல் மும்பை சென்றுள்ள காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
நயன் விக்கி தம்பதிகள்
நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இருவரது திருமணத்துக்கும் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இருவரது திருமணத்தின் போது பரிமாறப்பட்ட உணவுகள், நயன்தாரா அணிந்திருந்த உடை என அனைத்தும் செய்திகளானது.
திருமணத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நிலையில், தனது தாய் வீட்டிற்கு சென்று வந்தார்.
இருவரும் தாய்லாந்து நாட்டில் தங்கள் தேனிலவு நாட்களைக் கழித்து இந்தியா திரும்பிய நிலையில் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
வைரலாகும் நயனின் காணொளி
இந்நிலையில் நயன்தாரா தனது கணவர் விக்கியுடன் தான் பெரும்பாலும் அனைத்து இடங்களுக்கு சென்றுவருகின்றார். ஆனால் தற்போது திருமணமாகி முதன்முறையாக கணவர் இல்லாமல் தனியாக மும்பை படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார்.
கருப்பு நிற டி சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்துள்ள நயன்தாரா கழுத்தில் தாலி மட்டும் அணிந்து கொண்டு விமானநிலையத்திலிருந்து வந்துள்ளார். இக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
