தற்கொலை எண்ணத்திலிருந்து மீள முடியாமல் தவித்த பிரபல நடிகை: தற்போது இவரது நிலை என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை மோகினி தற்போது மதபோதகராக மாறி உள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
தஞ்சாவூரை சேர்த்தவர் நடிகை மோகினி, கடந்த 1991ம் ஆண்டு ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, பின்பு அடுத்தடுத்து பல மொழிகளில் நடித்து அசத்தினார்.
கொழுகொழு கன்னங்கள், பூனைக்கண், ஸ்டைலிஷான பேச்சு ரசிகர்களை கவர்ந்த தன்னுடைய அழகால் கவர்ந்த மோகினி, முன்னணி நடிகையாக இருக்கும்போதே கடந்த 1999ஆம் ஆண்டு பாரத் கிருஷ்ணசுவாமி என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார்.
திருமணத்திற்கு பின்பு சில படங்களில் நடித்த இவர் கடைசியாக 2006ம் ஆண்டு கடைசியாக கலெக்டர் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

பின்னர் தன்னுடைய கணவர் மற்றும் இரண்டு மகன்களை கவனித்து கொள்ள திரையுலகை விட்டே ஒதுங்கியதோடு, தற்போது மதபோதகராக மாறியுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நடிகை மோகினி கூறுகையில், "தன்னுடைய குடும்ப வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், சில நிகழ்வுகள் காரணமாக உடலளவிலும், மனதளவிலும், கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், இதனால் தற்கொலை எண்ணமும் வந்தது.
இதற்காக பல மருத்துவர்களை நாடிய போதும் தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் போதனைகள் தனக்கு ஆறுதலை கொடுத்தது. அதில் எனக்கு நிம்மதி கிடைத்ததால் தொடர்ந்து அந்த பணியை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
