என்னை ஏன் இப்படி சொல்றீங்க? கண்ணதாசனிடம் கதறி அழுத மனோரமா; பல ஆண்டுக்கு பின் வெளிவந்த ரகசியம்!
ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமா உலகில் கொடிக்கட்டி பறந்த நடிகை என்றால் அது மனோரமா தான். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். மறைந்த நடிக மனோரமாவின் இழப்பு பெரிய இழப்பாகவே திரையுலகில் பார்க்கப்படுகிறது.
நடிகையாக, பாடகியாக கலக்கிய அவர் 1000 படங்களிலும் 5000 மேடை நாடகங்களிலும் 2015ம் ஆண்டு வரை சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.
அவர் வாங்காத விருதுகளே இல்லை, கலைமாமணி விருது, தேசிய விருது, பத்ம ஸ்ரீ விருது, கலா சாகர் விருது என ஏகப்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
திருமணம்
இவர், 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ்.எம். ராமநாதன் அவர்கள் மனோரமாவை காதலித்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் இருக்கிறார்.
மனோரமா கணவருடன் பிரிவுக்கு பிறகு மகனுடன் சென்னையில் சொந்த வீட்டில் வசித்து வந்தார்.
சாதனை
இவரின் பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற் றுள்ளது. தமிழ் மொழி மட்டுமே தெரிந்தாலும், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், சிங்களம் என ஆறு மொழி திரை ப்படங்களில் நடித்தவர்.
பத்ம ஸ்ரீ - 2002, தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகை (புதிய பாதை - 1988), தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, வாழ்நாள் சாதனையார் விருது - 2015, புதிய தலைமுறை (தொலைக்காட்சி) சக்தி விருதுகள், மற்றும் பல திரைத்துறை சார்ந்த விருதுகளை வென்றவர்.
பெரிய கதாநாயகியாக வலம் வர வேண்டும் என ஆசைப்பட்ட இவருக்கு ஆரம்பத்தில் கண்ணதாசன் தான் வாய்ப்பு வழங்கினாராம்.
புலம்பிய மனோரமா
ஆனால் அதன் பின்னும் காமெடி கதாபாத்திரம் மட்டுமே கிடைத்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்து மனோரமா கண்ணதாசனிடம் அழுது புலம்பி இருக்கிறார். அப்போது, பேசிய அவர், நான் நாடகங்களில் கதாநாயகியாக நடித்து, அதன் பிறகு சினிமாவில் பெரிய ஒரு நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
கவிஞர் கண்ணதாசனின் அறிவுரை
அதன் பிறகு கண்ணதாசன் மனோரமாவிடம் எடுத்து பேசியுள்ளார். அதில், நீ கதாநாயகியாக நடித்தால் அதிக பட்சம் மூன்று வருடம் மட்டுமே சினிமாவில் நடிக்க முடியும். அதன்பின் சினிமாவை விட்டு விலகி விடுவாய்.
ஆனால் காமெடி வேடத்தில் நடித்தால், குணச்சித்திர வேடங்கள் கிடைத்து, வாழ்நாள் முழுவதும் நீ சினிமாவில் இடம்பிடித்து விடுவாய் என்று கண்ணதாசன் அறிவுரை கூறினாராம்.
கொண்டாடப்படும் நடிகை
பின், கதாநாயகியாகவேண்டும் என்ற ஆசையை விட்டு விட்டு, சினிமாவில் வாழ்நாள் முழுவதும், நகைச்சுவை கதாபாத்திரம் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்துள்ளார்.
நகைச்சுவை வேடம் ஏற்று நடிப்பதில் ஆண்களின் ஆதிக்கம் இருந்த காலக்கட்டத்தில் தனித்து, தனித்துவமாய் தனது திறமையை நிரூபித்து சாதித்தவர் ஆச்சி மனோரமா. இன்று இவர் இல்லையென்றாலும், காலம் காலம் அவர் நடித்த படங்கள் மட்டுமே என்னென்றும் கொண்டாப்படும் என்பதே நிதர்சனமான உண்மை...