நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி! புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகை குஷ்பூ திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணத்திற்கு பின்பு நடிப்பிலிருந்து சற்ற விலகினார்.
பின்பு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் தனது இடத்தினை பிடித்து வருகின்றார்.
நடிகையாக மட்டுமின்றி, தனது கணவரும், இயக்குனருமான சுந்தர் .சி இயக்கியுள்ள 'காபி வித் காதல்' என்கிற படத்தை குஷ்பூ தயாரித்துள்ளார். இந்த திரைப்படம், இந்த வாரம் ரிலீசாக இருந்த நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வருகையால் தள்ளி போனது.
மேலும், கணவருடன் பல்வேறு இடங்களுக்கு சென்ற போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட குஷ்பூ திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
மருத்துவமனையில் சிகிச்சைபெறும் புகைப்படத்தை பகிர்ந்து, தனக்கு coccyx bone (முதுகு தண்டுவள பகுதிக்கு கீழ்) மிகவும் வலி ஏற்பட்டதாகவும், இதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
2 நாட்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், எனவே இரண்டு நாட்களுக்கு பின்னர் மீண்டும் தன்னுடைய வழக்கமான பணிகளை மேற்கொள்வேன் என தெரிவித்து, விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
குஷ்புவின் இந்த புகைப்படத்தை பார்த்து பதறி போன ரசிகர்கள்... விரைவில் நலம் பெற்று, வர தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.