மகளுக்காக ஓபனாக வாய்ப்பு கேட்கும் நடிகை தேவயானி - அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகை தேவயானி தன் மகளுக்காக மேடையில் இசையமைப்பாளர் சாயிடம் வாய்ப்பு கேட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை தேவயானி
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை தான் தேவயானி. இவர் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
அகத்தியன் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த காதல் கோட்டை திரைப்படம் தேவயானிக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு அடையாளத்தை பெற்று கொடுத்தது.

இதன் பின்னர் அவர் நடித்த எல்லா படங்களும் வெற்றியில் தாறுமாறாக ஹிட் அடித்தது. எந்தவிதமான கிளாமரும் இல்லாமல் முன்னணி நடிகைகளில் ஒருவராக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் தான் நடிகை தேவயானி.
இப்படி இருந்த தேவயானி இரண்டே படங்கள் இயக்கி இருந்த இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்தது.

இனியா
தேவயானிக்கும் ராஜகுமாரனுக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் தான் இனியா இவர் பிரபல டிவியின் இசை நிகழ்ச்சியாக சரிகமப வில் கலந்துகொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
இந்த போட்டியில் இனியாவிற்கு டைடில் கிடைக்கவில்லை என்றாலும் மக்கள் மனதில் தன் பாடலுக்கு ஒரு இடத்தை பிடித்து விட்டார். இப்படி இருக்க நடிகை தேவயானி இசையமைப்பாளர் சாய்க்கு ஒரு விரது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதில் நடிகை தேவயானி "முன்பு சாய் அபயங்கரின் அப்பா, அம்மாவுக்கு ரசிகர்களாக இருந்தோம். இப்போது சாய் அபயங்கருக்கு ரசிகர்களாக இருக்கிறோம்.
நீங்கள் மென்மேலும் வளர வேண்டும். எனது மகளும் நன்றாக பாடுவார். எனது மகள் இனியா உங்களின் தீவிரமான ரசிகை. அவங்களுக்கு உங்கள் இசையில் பாடல் பாட வேண்டும் என்பது ஆசை.

வாய்ப்பு இருந்தால் அழைத்து கொடுங்கள்" என கூறினார். இதனை பார்த்த ரசிகர்கள் தேவயானி எவ்வளவு பெரிய நடிகை அவர் தன்னுடைய மகளுக்காக மேடையில் வாய்ப்பு கேட்குராரே இது எவ்வளவு பெரிய விடயம் என ட்ரென்டாக்கி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |