குரலை இழந்து பேச முடியாமல் போன நடிகை ஊர்வசியின் தங்கை - உருக்கமான பதிவு
நடிகை ஊர்வசியின் தங்கை நடிகை கலா ரஞ்சனி சமீபத்தில் ஒரு நேர்காணலில் படப்பிடிப்பின் போது செய்த தவறினால் அவருடைய குரலை அவர் இழந்து பின்னர் அதிலிருந்து மீண்டு வந்ததை உருக்கமாக கூறி இருக்கிறார்.

நடிகை கலா ரங்சனி
தென்நிந்திய திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகை தான் கலா ரஞ்சனி. இவர் பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில், குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.
இவர் நடிகை ஊர்வசியின் தங்கையாவார்.
பொதுவாக ஊர்வசியின் குடும்பம் முழுவதும் கலைத்துறையில் திறமைவாய்ந்தவர்கள். கலா ரஞ்சனி மிகவும் திறமையான நடிகை. இவருடைய கதாபாத்திரங்களில் இவர் மிகவும் எதார்தமாக நடித்திருப்பார்.
கலா ரஞ்சினிதமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

கலா ரஞ்சனி குடும்பத்தை அடிப்படையாக கொண்ட கதாபாத்திரமான அம்மா, அக்கா போன்ற உணர்ச்சிப் பூர்வமான வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
சில காலமாக சினிமாவில் கலா ரஞசனியை பார்க்க முடியாமல் இருந்தது. இந்த நிலையில் தான் கலா ரஞ்சனி சமீபத்தில் பரதநாட்டியம் படம் நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்த பற்றிய நேர்காணலில் கலா ரஞ்சனி தன்குரலை இழக்க வேண்டிய சூழல் வந்துள்ளது. பின்னர் கலா ரஞ்சனி அதில் இருந்து மீண்டும் வந்துள்ளார்.

குரலை இழந்த கலா ரஞ்சனி
அவர் அந்த காணொளியில் ஒரு படப்பிடிப்பின் போது ஒரு தவறு நடந்ததால் என்னுடைய குரலை நான் இழக்க நேரிட்டது. அதன் பின்னர் என் வாழ்க்கையில் அது ஒரு பெரிய இழப்பாக இருந்தது என கூறினார்.
மேலும் நான் நடித்த திரைப்படத்தில் ரத்த வாந்தி எடுப்பது போல ஒரு சீன் இருந்தது.
இதற்கு பொதுவாக ரசாயனம் சேர்க்காத சிவப்பு நிற குங்குமம் அல்லது சிவப்பு நிற பொடியை தேங்காய் எண்ணையில் ஊற்றி குழைத்து வாயில் வைத்து கொண்டு அந்த காட்சியை பார்ப்பவர்கள் கண்டுபிடிக்காதபடி நடித்து முடிக்க வேண்டும்.

இங்கே தான் ஒரு தவறு நடந்து விட்டது. என்னுடைய மேக்கப் மேன் , தேங்காய் எண்ணெய் என்று நினைத்து அசிட்டோன் என்கிற ரசாயனத்தை குங்குமத்தில் கலந்து கொடுக்க அதை நான் என் வாயில் ஊற்றினேன் உடனே எனக்கு தொண்டை எரிச்சலாக ஆரம்பித்தது.
சில நாட்கள் என்னால் பேச கூட முடியவில்லை.
இதன் பின்னர் சிகிச்சை எடுத்துகொண்டேன். அறவே பேசமுடியாமல் இருந்த எனக்கு பேச்சு வந்தது. ஆனால் முன்னர் போல குரல் இல்லாமல் கொஞ்சம் கரகரவென இருந்ததால் நான் அந்த சம்பவத்தின் பின்னர் நடித்த படங்களில் எல்லாம் எனக்கு டப்பிங் குரல் தான் கொடுத்தார்கள். அன்று படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவம் என் வாழ்க்கையையே திருப்பி போட்டது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |