ஆசிரியராக இருந்து மாணவியை காதலித்து திருமணம் செய்த நடிகர் தெரியுமா?
ஆசிரியராக இருந்து தன்னிடம் படிக்க வந்த மாணவியைக் காதலித்து திருமணம் செய்த முன்னணி நடிகர் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நடிகர் மாதவன்
தமிழ் சினிமாவில் அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் மாதவன். இவரது தோற்றம் இளம்பெண்களின் மனம் கவர்ந்தவராக மாறினார்.
அதன் பின்பு மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், அன்பே சிவம் என பல படங்களில் நடித்து அசத்தினார். அண்மையில் வெளியாகி வெற்றிப்படமான துரந்தார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் 3000 கோடி வசூலை எட்டியதாக கூறப்படும் நிலையில், தற்போது மாதவனின் காதல் கதை இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மாணவி மீது ஏற்பட்ட காதல்
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாதவன், சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆசிரியராக வேலை செய்துள்ளார். ராணுவத்தில் சேர்வதற்கு ஆசைப்பட்ட நிலையில், பெற்றோர்களின் வற்புறுத்தல் காரணமாக மாணவர்களுக்கு திறன் மேலாண்மை பயிற்சி அளிக்கும் ஆசிரியராக இருந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, தன்னிடம் மாணவியாக சேர்ந்தவர் தான் சரிதா. சரிதா விமான பணிப்பெண்ணாக வேண்டும் என்பதற்காக மாதவனிடம் பயிற்சி பெற மாணவியாக சேர்ந்துள்ளார்.

பயிற்சி முடிந்ததும், விமான பணிப்பெண்ணாகவும் சரிதா தெரிவு செய்யப்பட்ட நிலையில், மாதவனுக்கு நன்றி கூறுவதற்கு இரவு உணவிற்கு அழைத்துள்ளார். அப்பொழுது இவர்களின் சந்திப்பு காதலாக மாறி கடந்த 1991ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
மாதவன் பேட்டி ஒன்றில் கூட, “எந்த கணவரும், மனைவியுடன் வாக்குவாதம் செய்து வெல்ல முடியாது” என்று கூறியிருந்தார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ள நிலையில், சினிமாவில் மட்டுமின்றி குடும்பத்திற்கான நேரத்தையும் கொடுத்து நல்ல குடும்ப தலைவராகவும் இருந்து வருகின்றார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |