டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளுக்குப் பின் என்ன நடந்தது? ஜாய் கிரிஸில்டாவின் பதிவு வைரல்!
டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு என்ன நடந்தது என்று கேட்பவர்களுக்கு, இதோ ஒரு புதிய தகவல்... என குறிப்பிட்டு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜாய் கிரிஸில்டா - ரங்கராஜ் சர்ச்சை
கடந்த ஆண்டில் இருந்தே இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டிரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா கடந்த ஆண்டு, தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து, கர்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியிருந்தார்.
முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிட்ட ஜாய் தன் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என போராடி வந்தார்.

ஒரு பெண்ணை ஏமாற்றிவிட்டு தனக்கும் இந்த குழந்தைக்கும் சம்பந்நதம் இல்லை என வெளிப்படையாகவே பொய் கூறி தப்பித்துவிடலாம் என தப்பு கணக்கு போட்ட மாதம்பட்டி ரங்கராஜ் நீதிமன்ற உத்தரவின் படி செய்யப்பட்ட மரபணு பரிசோதனையில் வசமாக சிக்கினார்.அதனால் ஜாய் கிரிஸில்டாவின் நீண்ட நாள் போராட்டத்துக்கு விடை கிடைத்துள்ளது.
ஒரு பெண்ணின் கன்னியத்தை பாதிக்கம் வகையில் ஜாக்கு எதிராக கருத்ததுக்கள் முன்வைக்கப்பட்ட போதும் பெண் சிங்கம் போல் தனித்து நின்று போராடி இன்று நியாயம் பெற்றுள்ளார்.

இந்நிலையில்,டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு என்ன நடந்தது என்று கேட்பவர்களுக்கு, இதோ ஒரு புதிய தகவல்... என குறிப்பிட்டு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதில் அவர் குறிப்பிடுகையில், மதம்பட்டியரங்கராஜ், ராக ரங்கராஜைத் தன் மகனாக ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், வாழ்நாள் முழுவதும் அவனுக்குத் துணையாக நிற்பதாகவும் கூறியுள்ளார். அவர் தன் மகன் ராக ரங்கராஜை ஒருபோதும் கைவிட மாட்டார்!பொறுத்திருந்து பார்ப்போம். என பதிவிட்டு ஒரு புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |