தூத்துக்குடி விமான நிலையத்தில் விஜய் செய்த சம்பவம் - நடிகர் ஸ்ரீமன் பகிர்ந்த விடயம்
நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய் தூத்துகுடி விமான நிலையத்தில் செய்த செயல் தொடர்பாக நடிகர் ஸ்ரீமன் பகிர்ந்த விடயம் தற்போது இணையத்தில் மீண்டும் ரசிகர்களால் வைராலாக்கப்பட்டு வருகின்றது.
நடிகர் ஸ்ரீமன், விஜய் உடனான தனது நட்பு மற்றும் விஜய்யின் கனிவான குணம் குறித்து சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பேசி ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார்.

விஜய் குறித்து ஸ்ரீமன்..
அதில் அவர் குறிப்பிடுகையில், நான் எப்போது நண்பர் விஜயை பற்றி சொன்னாலும் நிச்சயம் இது அரசியல் சம்பந்தப்பட்டதாக இருக்காது. அது தனிப்பட்ட நட்பு சார்ந்தாக தான் இருக்கும்.
என்னுடைய வேலையொன்றுக்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்து இறங்கிய ஐந்து நிமிடங்களில் தளபதி விஜய் விமான நிலையத்துக்கு வருவதாக தகவல் வந்தது.

எத்ததையோ கார்கள், எத்தனையே மக்கள், ஊடகத்தினர் அனைவரும் விஜய்க்காக காத்திருந்தார்கள். இதற்கு மத்தியில் நானும் ஒரு ஓரமாக நின்றிருந்தேன்.
விஜய் செல்வதற்கு தனி வழி, விஜய் மிகவும் பிஸியாக நடந்து வந்தார் இருந்தபோதும், என்னை பார்த்தும், "என்னடா இங்க? நல்லா பண்ணு" என்று அன்புடன் விசாரித்து மாத்திரமன்றி கட்டிப்பிடித்து ஆதரவும் தெரிவித்தார்.

இந்த மனது எல்லோருக்கும் வராது. அதை நான் சொல்வது ஏகப்பட்ட கமெண்ட்களை பெறுவதற்காக அல்ல... உண்மையிலேயே அவர் தற்போது இருக்கும் பிஸியாக சூழலில், வெளியில் அவரை காண லட்சக்கணக்கில் மக்கள் காத்திருக்கும் தருணத்திலும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசும் அவரின் எளிமை யாருக்கு வரும்.
வாழ்வில் உச்சத்தை தொட்டுவிட்ட போதும் நட்புக்கு மரியாதை செலுத்தும் அவரின் குணத்துகே... வாழ்க வளமுடன் என வாழ்த்தியும் பாராட்டியும் காணொளியில் பேசியுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |