இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி
kutty padmini slams actor mohan-sharma : 70, 80-களில் மலையாளத் திரையுலகில் வெளியான பிரபலமான ‘சட்டகாரி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் 170 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மூத்த நடிகர் மோகன் சர்மா.
மேலும் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து, இயக்கி, ஒரு காலத்தில் புகழிலும் பணத்திலும் உச்சத்தில் இருந்த மோகன் சர்மா, சமீபத்தில் அளித்த பேட்டி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
“ஒரு காலத்தில் போயஸ் கார்டனில் வாழ்ந்த எனது வாழ்க்கை இன்று இப்படி ஆகிவிட்டது. உடல்நிலை சரியில்லாமல், மாத்திரை வாங்கக்கூட பணமில்லாத நிலையில் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறேன்” என்று அவர் கண்ணீருடன் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களின் அனுதாபத்தை பெற்றது.

உண்மையை உடைத்த குட்டி பத்மினி
இந்தப் பேட்டிக்கு பதிலளிக்கும் விதமாக, நடிகை குட்டி பத்மினி வெளியிட்ட வீடியோவில் பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
குட்டி பத்மினி குறிப்பிடுகையில்,
மோகன் சர்மா தனது பேட்டியில், தென்னிந்திய பிலிம் சேம்பர் தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், தனது தகவலின்படி, கடந்த ஆண்டுதான் பிலிம் சேம்பர் சார்பில் அவருக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டதாக குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.

“பணத்தையும் பெற்றுக்கொண்டு, யாருமே எனக்கு உதவவில்லை என்று எப்படி சொல்ல முடிகிறது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“போயஸ் கார்டன் வீடு யாருடைய பணத்தில் வாங்கப்பட்டது?” மோகன் சர்மா தனது பழைய வாழ்க்கையை நினைவுகூரும்போது குறிப்பிட்டதாகக் கூறப்படும் போயஸ் கார்டன் வீடு குறித்தும் குட்டி பத்மினி பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.
நடிகை லஷ்மியை மோகன் சர்மா திருமணம் செய்து வாழ்ந்த காலகட்டத்தில், அந்த வீட்டை வாங்குவதற்காக லஷ்மி தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.5 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அந்த வீடு தனது பெயரில் வாங்கப்பட்டதாகவும் குட்டி பத்மினி குற்றம்சாட்டியுள்ளார்.

“வெயில், மழை பாராமல் உழைத்து சம்பாதித்த பணத்தை லஷ்மி கொடுத்தார். ஆனால் அந்தப் பணத்தில் வாங்கப்பட்ட வீட்டை தனது பெயரில் பதிவு செய்துகொண்டார்” என குட்டிபத்மினி தெரிவித்துள்ளார்.
மூன்று திருமணங்கள்
மேலும், இந்த விஷயம் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் லஷ்மிக்கு தெரியவந்ததாகவும் குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.
மேலும், லஷ்மி இதுவரை மோகன் சர்மாவைப் பற்றி பகிரங்கமாக தவறாகப் பேசியதில்லை என்றும், அதே நேரத்தில் மோகன் சர்மா தனது வாழ்க்கை பாதிக்கப்பட்டதற்கு லஷ்மியே காரணம் என பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.
லஷ்மியைப் பிரிந்த பின்னர் மோகன் சர்மா இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து பெற்றதாகவும், அதன் பிறகு சாந்தி என்ற பரதநாட்டியக் கலைஞரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டதாகவும் குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.
மூன்றாவது மனைவியான சாந்தியிடமும் குடும்ப வன்முறை மற்றும் பணம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரணமாக சாந்தியும் அவரைப் பிரிந்து சென்றதாக அவர் கூறுகிறார். இவ்வாறு மூன்று பெண்களின் வாழ்க்கையிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தியதாக மோகன் சர்மா மீது குட்டி பத்மினி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இது முற்றிலும் பொய்...
“சாப்பாட்டுக்கே வழியில்லை, மருந்து வாங்கக்கூட பணமில்லை என்று சொல்கிறார். ஆனால் அவர் அணிந்திருக்கும் செருப்பின் விலை ரூ.6,000” என்று கூறியுள்ள குட்டி பத்மினி, “இது எப்படி சாத்தியம்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, மோகன் சர்மா கூறியதாக வெளியான தகவல்களை “நாடகம்” மற்றும் “அண்டப் புளுகு” என கடுமையாக விமர்சித்த அவர், மூன்று பெண்களின் வாழ்க்கையைப் பாதித்ததாகக் கூறப்படும் செயல்களுக்கு ஒருநாள் அவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

மேலும் தமிஜழக முதலமைச்சர் விஜயிடம் உதவி கேட்டடிருப்பதும் மக்களின் கவனத்தை ஈர்க்கத்தான், அனதாபத்தை பெறத்தான் விஜய் விதவி செய்தாலும் காலம் கடந்தபின் அவரையும் குறை கூறுார் என மோகன் சர்மா குறித்து பல குற்றச்சாட்டுககளை முன்வைத்து பேசியுள்ளார் .குட்டி பத்மினியின் இந்த பேட்டி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |