நடிகர் மாதவனின் மனைவி என்ன செய்கிறார் தெரியுமா? இவரும் சாதனையாளராம்.. கணவர் போட்ட பதிவு
நடிகர் மாதவனின் மனைவி தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் மாதவன்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களுக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான் நடிகர் மாதவன்.
இவர், நடிப்பில் கடைசியாக Test திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். கிரிக்கட்டையும், குழந்தையில்லாத பெண்ணின் வலியையும் மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் மாதவனின் மனைவி பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்தவகையில், நடிகர் மாதவனின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சரிதா முக்கிய பங்கு வகிக்கிறார்.
காதல் திருமணம்
கடந்த அக்டோபர் 14 அன்று மகாராஷ்டிராவின் நாக்பூரில் பிறந்த சரிதா, 1990களின் முற்பகுதியில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் படித்துக் கொண்டிருக்கிறார்.
மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் நடந்த ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட பொழுது மாதவன் தான் அவருக்கு பயிற்சிக் கொடுத்துள்ளார். அன்று முதல் இன்று வரை இருவரும் ஒன்றாக பயணித்து வருகிறார்கள்.
மின்னணுவியலில் பட்டம் பெற்ற மாதவன், இந்தியா முழுவதும் தொடர்பாடல் மற்றும் பொதுப் பேச்சுப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வந்துள்ளார்.
கடந்த 1991 இல் கோலாப்பூரில் நடந்த ஒரு பட்டறையில், விமானப் பணிப்பெண் பணிக்கான நேர்காணலுக்குத் தயாராக சரிதா கலந்து கொண்டுள்ளார். சுமாராக எட்டு ஆண்டுகள் காதலித்து இருவரும் தமிழ் முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடந்தது.
இதனை தொடர்ந்து மணிரத்னத்தின் “அலைபாயுதே” திரைப்படம் கடந்த 2000 ஆம் ஆண்டு திரையில் வெளியானது. இந்த திரைப்படம் மூலம் பிரபலமான மாதவன்- சரிதா தம்பதிகளுக்கு கடந்த 2005 ஆகஸ்ட் 21 அன்று மகன் வேதாந்த் பிறந்தார். வேதாந்த் தற்போது சர்வதேச நீச்சல் வீரராகவும் இருக்கிறார்.
தற்போது என்ன செய்கிறார்?
சரிதா வெறும் பிரபல நடிகரது மனைவி மட்டுமல்ல, இவர், ஒரு ஃபேஷன் டிசைனராகவும் இருக்கிறார்.
மாதவன் நடிப்பில் வெளியான பல படங்களுக்கு அவர் தான் உடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார். ஆஸ்திரியாவின் க்ளாகன்ஃபர்ட்டில் “சரிதா” என்ற பெயரில் சொந்த ஆடை வடிவமைப்பு நிறுவனத்தையும் நடத்திக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய வீட்டுச் செலவுகளைக் கவனிப்பது தன் மனைவி தான் என மாதவனும் கூறியுள்ளார். மனைவியுடன் சேர்ந்து மாதவன் லியுகோ பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் இருவரும் இணைந்து நடத்தி வருகின்றார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு “ரெஹனா ஹை தேரே தில் மே” படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான மாதவனுக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் இருந்தார்கள். பாலிவுட் விருந்துகள் முதல் தொண்டு நிதி ஃபேஷன் நிகழ்ச்சி வரை இருவரும் தம்பதிகளாக கலந்து கொள்வதை அவதானிக்கலாம்.
திருமண நாளில் இருவரும் போட்ட பதிவு
26வது திருமண நாளை முன்னிட்டு சரிதா பகிர்ந்த பதிவில், “ கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு சிறந்த முடிவை எடுத்தேன். அதான் உங்களை திருமணம் செய்தது..” என குறிப்பிட்டுள்ளார்.
மாதவன் திருமண நாளுக்கு போட்ட பதிவில், “எனக்குத் தேவையான அனைத்தையும் அளித்த பெண்ணுக்கு... ஒரு கணத்தையும் மாற்ற விரும்பவில்லை” என குறிப்பிட்டுள்ளார். இப்படி அன்பின் மாறி மாறி பரிமாறிக் கொண்டதை அவதானித்த ரசிகர்கள் இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மாதவனின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சரிதா முக்கிய பங்கு வகிக்கிறார். அக்டோபர் 14 அன்று மகாராஷ்டிராவின் நாக்பூரில் பிறந்த சரிதா, 1990களின் முற்பகுதியில் விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்று கனவு கண்டார்.
அதற்காக, மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் நடந்த ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டார். அங்குதான் மாதவன் பயிற்சி அளித்தார். 1991 இல் இருவரும் சந்தித்தனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |