விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக கிடக்கும் அருண் விஜய்.... பேரதிர்ச்சியில் ரசிகர்கள்! காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்
சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது தனது வலது கையில் காயம் ஏற்பட்டு விட்டதாக நடிகர் அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
நடிகர் அருண் விஜய் தற்போது சுவாரஸ்யமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுக்கும் நடிகராக திகழ்கிறார்.நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய் நடித்த விக்டர் கதாபாத்திரம் இவரின் சினிமா பயணத்தின் திருப்பு முனையாக அமைந்தது.
அதையடுத்து தொடர்ந்து குற்றம் 23, தடம், மாஃபியா,செக்க சிவந்த வானம் இப்படி பல படங்கள் நடித்தார்.ஏற்கனவே சினம் மற்றும் அக்னி சிறகுகள் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார்.
தற்போது பார்டர், பாக்சர், இயக்குனர் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக வலம் வருகிறார்.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த நிலையில், படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நடிகர் அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில்’ மிகப்பெரிய சண்டை காட்சி எடுக்கும் போது என்னுடைய வலதுப்புற கையில் காயம் ஏற்பட்டு விட்டது. ஷூட்டிங் முடிந்த பிறகு அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.