ஒல்லியான நடிகர் ஒருவருடன் ஆர்த்தி தொடர்பு- ஒரே புகாரில் போஸ்ட்டை தூக்கிய சுசித்ரா
நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கில் சுசித்திரா எதிராக ஆர்த்தியின் தந்தை பொலிஸ் புகார் கொடுத்துள்ளார்.
விவாகரத்து
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் ரவிமோகன்.
இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய காதல் மனைவியை பிரியப்போவதாக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து ரவிமோகன் வீட்டை விட்டு வெளியேறி, கெனிஷா என்ற பெண்ணுடன் உறவில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.
நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இரண்டு தரப்பும் மாறி மாறி குறைசொல்லி அறிக்கைகள் வெளியிட்டு வந்தனர்.
“இனி அறிக்கை வெளியிட கூடாது..” என இரண்டு தரப்புக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க பாடகி சுசித்ரா இன்ஸ்டாவில் ஆர்த்தி பற்றி பல சர்ச்சையான பதிவுகளை போட்டு வருகிறார்.
தந்தை எடுத்த அதிரடி முடிவு
இந்த நிலையில், ஆர்த்திக்கும் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் ஒல்லியான நடிகருக்கும் தொடர்பு இருக்கிறது என பாடகி சுசித்ரா இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த ஆர்த்தி குடும்பத்தினர், இப்படியான அவதூறுகளை பேசியதற்கு சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்த்தியின் தந்தை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து பாடகி சுசித்ரா தனது சர்ச்சை இன்ஸ்டாகிராம் பதிவுகள் அனைத்தையும் நீக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
