55 ஆண்டுகளாக பிரியாமல் தோழியாக இருக்கும் யானைகள்! சுவாரசியமான கதை இதோ
55 ஆண்டுகளாக இணைபிரியாமல் தோழிகளாக வாழும் யானைகளைக் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
பிரியாமல் இருக்கும் யானைகள்
பொதுவாக மனிதர்கள் நண்பர்களாக இருப்பதை நாம் அவதானிக்கின்றோம். ஆனால் விலங்குகள் நண்பர்களாக இருக்குமா? என்ற கேள்விக்கு பலருக்கும் பதில் தெரியாமல் இருக்கின்றது.
ஆனால் இவற்றிற்கு அருமையான காணொளி ஒன்றினை வெளியிட்டு பதில் அளித்துள்ளார் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா.
இவர் வெளியிட்டுள்ள இரண்டு யானைகள் இணைபிரியாமல் ஒன்றாக வருகின்றது. இந்த யானையின் கதைகள் பார்வையாளர்களை வியக்க வைக்கின்றது.
இந்த யானையின் பெயர் பாமா (வயது 75), காமாட்சி (வயது 65) ஆகும். இவை இரண்டும் சாப்பிடும் போது, ஓய்வெடுக்கும் போது, நடக்கும் போது ஒன்றாகத் தான் செல்லுமாம். சாப்பிடுவதற்கு கரும்பு வேண்டும் என்றாலும் இருவரும் சேர்ந்து வந்துதான் வாங்குவதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
யானைகளுக்கு நினைவுத்திறன் அதிகமாகவே இருக்குமாம். 1000 கி.மீற்றர் வரை சரியாக இடத்தின் வழியை தெரிந்து வைத்துக் கொள்வதுடன், 200 கிலோ மீற்றர் தூரத்தில் கூட மோப்பம் பிடிக்க முடியும். மேலும் மனிதர்களைப் போன்று தனது இனத்தில் யானை இறந்துவிட்டால், அதனை நினைத்து மிகவும் துக்கப்படும் குணம் கொண்டதாக இருக்குமாம்.
This Friendship Day, we celebrate a bond that has stood the test of time not between humans, but between two magnificent elephants. Bhama (age 75) and Kamatchi (age 65), have been inseparable best friends at our Theppakadu Elephant Camp at , Mudumalai, Nilgiris for over 55 years.… pic.twitter.com/pmIrU8HiUT
— Supriya Sahu IAS (@supriyasahuias) August 3, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |