ஒரே நேரத்தில் வக்ர நிலையில் 4 கிரகங்கள்: மார்ச் 4 முதல் இந்த ராசியினர் ஜாக்கிரதை!
ஜோதிட சாஸ்திரங்களின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், மார்ச் 4 ஆம் திகதி ஒரே வேளையில் 4 சக்தி வாய்ந்த கிரகங்கள் வக்ர நிலை அடையப்போகின்றது. பொதுவாக ஒரு கிரகம் வக்ரமாக இருந்தாலே, பாக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

இந்நிலையில் ராகு, கேது, குரு மற்றும் புதன் ஆகிய 4 கிரகங்கள் வக்ரமாக இருப்பதன் தாக்கம் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தப்போகின்றது.
அப்படி ஒரே நேரத்தில் 4 கிரகங்கள் வக்ர நிலையில் இருப்பதால், உச்சகட்ட பாதக பலன்களை அனுபவிக்ப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

4 கிரகங்கள் ஒரே வேளையில் வக்ரமாக இருப்பதால் கடக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல்வேறு வகையிலும் பாததக பலன்கள் ஏற்படப்போகின்றது. குறிப்பாக தொழில் விடயத்தில் எதிர்ப்பாராத சிக்கல்களை அனுபவிக்க நேரிடும்.
முக்கியமாக பணியிடத்தில் ஏற்படும் பிரச்சினைகளால் மன அழுத்தம் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சிகைளால் அவதிப்பட நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமையற்ற சூழல் உருவாக வாய்ப்பு காணப்படுகின்றது.
சிறிய வாக்குவாதங்கள் கூட பாரிய இழப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என்பதால் இந்த காலகட்டத்தில் மற்றவர்களிடம் வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீரை்கள்.
விருச்சிகம்

மார்ச் மாதத்தில் ஒரே வேளையில் 4 கிரகங்கள் வக்ரமாக இருப்பதால், விருச்சிக ராசிக்காரர்கள் பல விடயங்களிலும் சவால்களை சந்திக்க நேரிடும்.
நிதிநிலையில் பாரிய சிக்கல்கள் உருகாகும். பணஇழப்புகளை சந்திக்க அதிக வாய்ப்பு காணப்படுகின்றது என்பதால் பணவிடயங்களை கையாளும் போது மிகுந்த அவதானம் தேவை.
புதிய முதலீடுகளை செய்வதைத் இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது பத்திரங்களை முழுமையாகவும் அவதானமாகவும் படித்து பார்த்து கையொப்பம் இட வேண்டும். சொத்து விடயங்களில் ஏமாற்றப்பட அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
மீனம்

மார்ச் மாதத்தில் 4 கிரகங்கள் வக்ரமாக இருப்பதால், மீன ராசிக்காரர்கள் வலுவான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.
பொருளாதாரத்தில் ஏற்படும் வீழ்ச்சியால் தனிப்பட்ட ரீதியிலும், குடும்பத்திலும் அதிக பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அன அழுத்த பிரச்சினையால் ஆரோக்கியம் பாதிப்படும்.
இந்த காலகட்டத்தில் ஆரோக்கிய விடயத்தில் மிகுந்த அவதானம் தேவை. எந்த திட்டம் போட்டாலும், அது தோல்வியடையில் முடியும் வாய்ப்பு காணப்படுவதால், புதிய முயற்ச்சிகளை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |