24 வயது சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி... 30 பயணிகளை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சோகம்
இந்திய மாநிலமான தமிழகத்தில் பேருந்து ஓட்டிக்கொண்டிருந்த சாரதிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சாதூரியமாக செயல்பட்டு பயணிகளைக் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் என்ற 24 வயது இளைஞர் தனியார் பேருந்து நிறுவனத்தில் பேருந்து ஓட்டி வந்துள்ளார்.
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரங்குடி பிரிவு சாலை அருகே சென்ற போது குறித்த இளைஞருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதில் சற்று நிலைதடுமாறிய இளைஞர், சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை சாலையைக் கடந்து அருகே இருந்த முட்புதர் பகுதியில் நிறுத்தி உள்ளே இருந்த 30 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
பின்பு குறித்த இளைஞரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட போது அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
