59 வருஷத்துக்கு பிறகு இன்று உருவான 5 ராஜ யோகம்! திடீர் பணக்காரராகும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?
ஜோதிடத்தின் படி, செப்டம்பர் மாதம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஏனெனில் இந்த மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றும் போது நிறைய யோகங்கள் உருவாகின்றன.
அதுவும் ஒன்று, இரண்டு அல்ல, 5 சுப ராஜ யோகங்கள் ஒரே நாளில், 2022 செப்டம்பர் 24 ஆம் திகதியான இன்று சேர்கின்றன.
அதுவும் 59 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதிரியான 5 சுப யோகங்கள் ஒரே நாளில் வருகின்றன. இந்த 5 ராஜயோகங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் யார் யாருக்கு அதிர்ஷ்டம் என்று பார்க்கலாம்.
ரிஷபம்
இந்த அரிய யோகங்களால் ரிஷப ராசிக்காரர்களுக்கு பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. சனி அதிர்ஷ்ட வீட்டில் இருப்பதால், இரும்பு, பெட்ரோலிய பொருட்களை தொழிலாக கொணடவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
அதோடு, நவபஞ்சம் மற்றும் சமசப்தம யோகமும் பொருந்தி வருவதால், திடீரென்று நிதி நிலைமை மேம்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு வெற்றிகரமான காலமாக இருக்கும். ஹன்ச ராஜயோகம் தொழில் மற்றும் வியாபாரத்தில் விரும்பிய வெற்றியைத் தரும்.இந்த ராசிக்காரர்களின் புகழும் அதிகரிக்கும். மூன்று சுப கிரகங்கள் மையத்தில் இருப்பதால், விதியின் ஆதரவைப் பெறுவதாக கூறப்படுகிறது.
வாழ்க்கைத் துணையினால் செல்வம் அதிகரிக்கும்.
கன்னி
இந்த அரிய ராஜயோகங்களால் கன்னி ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் நிறைந்த காலமாக இருக்கும். புதன் நல்ல நிலையில் இருப்பதால், வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும்.
மறுபுறம், செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தின் அதிபதியான சுக்கிரனால் உருவாகும் ராஜயோகத்தால், திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும். மீடியா, திரைப்பட துறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். இக்காலத்தில் ஹன்ச, நீசபங்க மற்றும் பத்ர ராஜயோகங்கள் உருவாவதால், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் புதிதாக கிடைக்கும் ஒப்பந்தம் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். வியாபாரிகளுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.
வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல பலனை அளிப்பதாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் பொன்னான காலமாக இருக்கும். சனி சுப நிலையில் உள்ளார். இதனால் நீசபங்க மற்றும் பத்ர என்ற ராஜயோகம் உருவாவதால், வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கு இது சாதகமான காலமாக இருக்கும்.