20 வயது இளைஞரை இரண்டாவது திருமணம் செய்து அரங்கேறிய கொலை... 2 வருடத்திற்கு பின் உண்மை அம்பலம்
இரண்டாவது கணவரை தனது நண்பர்களுடனும், தான் தொடர்பில் இருந்த நபர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தென்காசி அருகேயுள்ள குத்துக்கல்வலசை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி அபிராமி(33). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கராஜ் உடல்நலக்குறைவால் இறந்த நிலையில் காளிராஜ் என்ற 20 வயது இளைஞரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் காளிராஜ் காணாமல் சென்றதால், அவரது பெற்றோர்கள் அபிராமியிடம் தனது மகனை இரண்டரை ஆண்டுகளாக காணவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன் வாக்குவாதமும் செய்துள்ளனர்.
மேலும் பொலிசாரிடம் புகார் கொடுக்கப்பட்டதையடுத்து, முன்னுக்கு பின் காரணத்தினைக் கூறி, இறுதியில் சமாளிக்க முடியாமல் அபிராமி குறித்த இளைஞரை கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
தனக்கும் தான் இரண்டாவதாக திருமணம் செய்த காளிராஜிக்கும் 10 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்தாலும் பெயருக்காகவே திருமணம் செய்ததாக கூறியுள்ள அபிராமி, பின்பு எனக்கும் மாரிமுத்து என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதையடுத்து, தன்னை அதிகமாக கண்டித்ததாகவும் கூறியுள்ளார்.
இதனால் அவரைக் கொலை செய்ய திட்டமிட்டு பாலில் மயக்க மருந்து கொடுத்து பின்ப கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாகவும், பின்பு நண்பர் முருகேசன் என்பவரின் உதவியுடன் தனது தோட்டத்தில் அடக்கம் செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
பின்பு பொலிசார் தோண்டி பார்த்ததில் அங்கே எலும்புக்கூடுகள் மட்டுமே கிடைத்த நிலையில், அதனை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் அபிராமி, மாரிமுத்து, முருகேசன் என்பவரை கைது செய்து பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.