சுற்றுலா பயணிகளுக்கு வாடகை மனைவியாக செல்லும் பெண்கள் - எந்த நாட்டில்?
வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் அங்கு தங்கி செல்லும் வரையில் ஒரு பெண்ணை பணம் கொடுத்து தன் மனைவியாக திருமணம் செய்து கொள்கிறார்கள்.

பணம் கொடுத்து மனைவியாக்கும் நாடு
உலகில் சில நாடுகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பெண்களை தங்கள் மனைவியாக வாழும்படி திருமணம் செய்து கொள்கின்றனர். அதாவது வாடகை மனைவிகளாக.
இது இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமாக ஒரு விடயமாக உள்ளது.
வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், அங்குள்ள உள்ளூர் பெண்களுக்கு பணம் கொடுத்து சில நாட்கள் (15 நாட்கள் போன்ற) அல்லது சில மாதங்கள் வரை தங்கள் மனைவியாக இருக்க ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.

குறிப்பிட்ட காலம் முடிந்ததும் இவர்கள் தங்கள் தங்கள் வழியில் வேறு வேறாக சென்று விடுவார்கள். இது ஊழை பணெ்களுக்கு வருமானம் தரும் வழியாக பார்க்கப்படுகின்றது.
சுற்றுலா பயணிகள் வாடகையாக திருமணம் செய்து கொண்ட பெண்கள் தோழிகளாக இருக்கிறார்கள். இவர்கள் உடல் உறவு மட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாகவும், சமையல் செய்யவும், வீட்டுப் பணிகளை செய்யும் ஒருவராகவும் இருக்கிறார்கள்.
இந்தோனேசியாவில் இந்தப் போக்கை ‘இன்பத் திருமணம்’ என்று அழைக்கிறார்கள். இது ஒரு தற்காலிக திருமணம் என்றும் கூறப்படுகின்றது.

பணம் எவ்வளவு?
- சுற்றுலா பயணி ஒருவர் ஒரு மனைவியை வாடகைக்கு எடுக்க நிரந்தரமான ஒரு விலை இல்லை. இந்த விலை பெண்ணின் அழகு, வயது, கல்வி, ஒப்பந்தம் எவ்வளவு காலம் வாடகைக்கு வேண்டும் என்பதை பொறுத்தே விலை நிர்ணயிக்கப்படுகின்றது.
- இதுவரை கிடைத்த தகவலின்படி வாடகை $1,600 முதல் $1,16,000 இந்திய மதிப்பிற்கு சுமார் ரூ. 1.33 லட்சம் இலிருந்து சுமார் ரூ. 96 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகின்றது.
- சில சமயங்களில் இந்த உறவுகள் மிகவும் நெருக்கமாகிப் போகும்போது, சுற்றுலாப் பயணிகள் அந்தப் பெண்ணை நிரந்தரமாகத் திருமணம் செய்து கொள்வார்களாம். அப்படி இல்லை என்றால் அந்த பெண்களுக்காக எதாவது உதவி செய்வார்களாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |