காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே கிணற்றில் விழுந்த இளைஞர்! 10 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு
திருவாரூரைச் சேர்ந்தவர் ஆஷிக், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் புதன்சந்தப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர். ஆஷிக் என்பவர் அதே பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இவர் இரவில் தான் பணிபுரியும் நூற்பாலையின் அருகே இருக்கும் கிணற்று பகுதியில் இருந்து காதலியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இருளில் நடந்தபடி போனில் பேசியபோது சுற்றுச்சுவர் இல்லாத தரைகிணற்றில் விழுந்துள்ளார்.
அவர் காப்பாற்றக்கோரி சத்தம் போட்டும் யாருக்கும் அது கேட்கவில்லை. சுமார் 10 மணி நேரத்திற்கு பிறகே அதாவது விடிந்தபிறகே அவர் கிணற்றில் தத்தளிக்கும் தகவல் தெரிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அதன் பின்னர் கயிறு கட்டி கிணற்றில் போராடிக் கொண்டி இளைஞரை மீட்டனர். அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.