வீட்டை சுத்தப்படுத்தும் போது கிடைத்த பாஸ்புக்... ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன இளைஞர்
சிலி நாட்டைச் சேர்ந்த இளைஞர் தனது வீட்டை சுத்தம்செய்த போது கிடைத்த வங்கி பாஸ்புக்கால் கோடீஸ்வரர் ஆகியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலி நாட்டைச் சேர்ந்த எக்ஸீயல் ஹினோஜோசா என்ற இளைஞர் ஒருவர் தனது வீட்டை சுத்தப்படுத்தியுள்ளார். அப்பொழுது தனது தந்தையின் பாஸ்புக் ஒன்றினை அவதானித்துள்ளார்.
ஆரம்பத்தில் அதனை சரியாக பொருட்படுத்தாத நிலையில், பின்பு அதிலிருந்த தொகையைப் பார்த்ததும் ஆச்சரியமடைந்துள்ளார்.
அதாவது வீடு கட்டுவதற்காக அவர் சேமித்து வைத்த தொகை அதிலிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் கேட்ட போது, பணத்தை கொடுக்க மறுத்ததுடன் போதுமான ஆவணங்கள் வேண்டும் என்று கூறி அனுப்பியுள்ளனர்.
நீதிமன்றத்தில் வழக்கு
இதையடுத்து குறித்த இளைஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விவாரித்த நீதிபதி, இறுதியாக பாஸ்புத்தகத்தில் கிடைத்த பணத்துடன் உரிய வட்டியும் வழங்குமாறு வங்கிக் உத்தரவிட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த இளைஞருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடிக்கும் அதிகமாக பணம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மாதமும் ஒரு சில ஆயிரங்கள் மட்டுமே சம்பாதித்து வரும் அந்த இளைஞருக்கு திடீரென ரூ.10 கோடி ஜாக்பாட் கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பணம் என்னுடைய அப்பாவின் பணம், அவர் எனக்காக சேர்த்து வைத்த பணம், எனவே தான் நான் சட்ட போராட்டம் நடத்திய இந்த வழக்கை வென்று உள்ளேன் என்று அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களுக்கு முன்பு அப்பா சேர்த்து வைத்த பணத்தால் அவரது மகன் தற்போது கோடீஸ்வரர் ஆகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |