ஐசியூ-வில் ஆபத்தான நிலையில் இருந்த யாஷிகாவின் தற்போதைய நிலை: தோழி வெளியிட்ட பரபரப்பு உண்மை
விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் யாஷிகாவின் உடல்நிலை குறித்து அவரது தோழி பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை யாஷிகா தனது தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கி சம்பவ இடத்தில் தோழி பவானி உயிரிழந்த நிலையில், யாஷிகா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இடுப்பு மற்றும் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் யாஷிகாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த விபத்திற்கு யாஷிகா வேகமாக கார் ஓட்டிச்சென்றதுதான் என்று பொலிசார் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி மருத்துவமனை சென்ற பொலிசார் அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த யாஷிகா ஆனந்த் தற்போது நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனை யாஷிகாவின் தோழி ஒருவர் வெளிப்படையாக அவரது உடல்நிலை பற்றியும் தற்போது அவர் நார்மல் வார்டுக்கு வந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்து ஏற்பட்ட சம்பவங்களை பற்றி விரிவாக இனிமேல் அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு விசாரணை நடத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.